என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை போக்குவரத்து காவல்துறை"
- தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டியதாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களிடம் போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த மே மாதம் வரை 'சன் கன்ட்ரோல் ஃபிலிம்' ஒட்டியதாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
- காலை 40 கி.மீ இரவில், 50 கி.மீ என்ற வேக அளவை மாற்ற போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.
- பாதுகாப்பான வேகம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிப்பு.
சென்னையில் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எவ்வளது வேகத்தில் வாகனங்களை ஓட்டலாம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது.
அதன்படி, காலை நேரத்தில 40 கி.மீ வேகத்தை தாண்ட கூடாது என்றும் இரவு நேரங்களில் 50 கி.மீ வேகத்தை மீறக்கூடாது என்றும் அறிவித்திருந்தது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேக கட்டுப்பாட்டு அளவை மாற்ற வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் காலை மற்றும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு வேகத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 40 கி.மீ இரவில், 50 கி.மீ என்ற வேக அளவை மாற்ற போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதனால், காலை, இரவு பாதுகாப்பு வேக அளவை, அதிவேகம் தடுக்கும் கருவி மூலம் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
பாதுகாப்பான வேகம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 40 கி.மீ வேகத்தில் சென்றால் அபராதம் கிடையாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்