என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி பதினெட்டு"
- தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
- ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது.
பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'.
ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கின்போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.
தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித்துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது 'ஆடி பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில் கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.
அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துவார்கள்.
மாலை நேரம் தயிரன்னம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப் படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை போக்குவார்கள்.
சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.
கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை வழிபடுவார்கள்.
இதற்காக அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம். மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக்கயிறு.
பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை நன்றியுடன் போற்றுவதுண்டு. சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.