search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினேஷ் குண்டுராவ்"

    • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
    • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

    மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

    கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
    • கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. கட்சி மேலிடம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இதனால் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். அப்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

    கடந்த சில நாட்களாக காங்கிரஸ் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    • அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
    • பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு நல்லது செய்யவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஏழைகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை பா.ஜனதா தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அரிசி கொடுக்க முடியாவிட்டால் பணம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறினர். ஆனால் அதையும் அக்கட்சியினர் விமர்சிக்கிறார்கள். உங்களின் இந்த நோய்க்கு எங்கிருந்து மருந்து கொண்டுவர முடியும்?.

    நாங்கள் பணம் கொடுக்கிறோம் அரிசி கொடுங்கள் என்று நாங்கள் மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசுக்கு கொடுக்க இருந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கிறோம். கூடுதல் அரிசியை ஏழைகளுக்கு வழங்குவதை பா.ஜனதா விரும்பவில்லை. அதனால் ஏழைகளுக்கு அரிசி கிடைக்காமல் செய்துவிட்டனர். பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு நல்லது செய்யவில்லை. நாங்கள் நல்லது செய்ய முயற்சி செய்தால் அதை பா.ஜனாவினர் தடுக்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவினருக்கு வயிற்றெரிச்சலா?. தயிரில் கல்லை தேடுவது ஏன்?.

    இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

    ×