search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பிகை"

    • புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள்.
    • இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம்.

    இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.

    பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி.

    ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

    • மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
    • பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும்.

    இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.

    மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.

    பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம்.

    நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

    • நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே.
    • ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி- சிவன்

    கவுமாரி- குமரன் (முருகன்)

    வைஷ்ணவி- விஷ்ணு

    வராஹி- ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி- நரசிம்மர்

    இந்திராணி- இந்திரன்.

    இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

    • நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
    • அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    தேவியரின் வாகனம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    அம்பாளை வணங்குவதன் பலன்

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்

    விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,

    மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
    • அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    உயிரைக் காக்கும் நவராத்திரி

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.

    இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.
    • இதை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதத்தில் அன்னை, நவராத்திரியில் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்து அதனால் எழுந்த கோபத்தினால் உக்கிரமாக இருந்தாள்.

    பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றி துதித்ததன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக காட்சி அளித்தாள்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறுவார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.

    இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.

    நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.

    இந்த கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லகரியில் அம்பிகையின் சவுந்தரியத்தை "உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.

    உன் முகமாகிய சந்திரனிடம் இருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக்கதிர்களை உண்ணும் சகோரப் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.

    ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கை புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன" என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சமயத்தில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளை பெறுவார்கள்.

    பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும்.

    இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

    இந்த சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.

    இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல தேஜசும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.

    இவர்களோ அல்லது இவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.

    எதிரிகள் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

    • ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும்.
    • சிவன் திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார்.

    பவுர்ணமி தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.

    ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம், பூர்வ ஆஷாடம் என்பது `பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் என்பது `உத்தராடம்' என்றும் சொல்லப்படுகிறது.

    உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வட மொழியில் `ஆஷாடீ' என்று சொல்வார்கள். அதுவே தமிழில் `ஆடி' என்று மருவி விட்டது. ஆடி மாதம் தோன்றியதற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

    ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் சிவபெருமான் உறைந்துள்ள கயிலாய மலைக்கு வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அப்போது அங்கு காவலுக்கு இருந்தாள். அவளது காவலை மீறி கயிலாய மலை உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான்.

    சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த ஆடி அரக்கன் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்.

    அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும். திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

    தன்னுடைய உருவ வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். இதனால் அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே `ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்ற வழக்கம் ஏற்பட்டது.

    • ஓம் கருகாவூர் தேவியே போற்றி ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    • ஓம் சக்தியின் வடிவமே போற்றி ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்பரட்சம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர் தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி

    ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி

    ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி

    ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி

    ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி

    ஓம் மாதர் மனம் மகிழச் செய்வாய் போற்றி

    ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி

    ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி

    ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி

    ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி

    ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி

    ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி

    ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி

    ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி

    ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி

    ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி

    ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி

    ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சார்ந்து நிற்போரை ரட்சப்பாய் போற்றி

    ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி

    ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி

    ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி

    ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி

    ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி

    ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி

    ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி

    ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி

    ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி

    ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாவாய் போற்றி

    ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி

    ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி

    ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி

    ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி

    ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி

    ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி

    ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்பாய் போற்றி

    ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி

    ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி

    ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    ஓம் கர்ப்பப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி

    ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி

    ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி

    ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி

    ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி

    ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி

    ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி

    ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி

    ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி

    ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி

    ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி

    ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி

    ஓம் மறுமையிலும் உடனிருந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி

    ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி

    ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி

    ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி

    ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி

    ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி

    ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி

    ஓம் சத்ரு பயம் நீங்க சரணடைந்தேன் போற்றி

    ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி

    ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி

    ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி

    ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி

    ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி

    ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி

    ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி

    ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி

    ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவல் சிரிப்பழகி போற்றி

    ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி

    ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி

    ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி

    ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி

    ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி

    ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி

    ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி

    ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணை செய்வாய் போற்றி

    ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கவுரியே போற்றி

    ஓம் நெஞ்சில் கவலைகள் நீக்குவாய் போற்றி

    ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி

    ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி

    ஓம் சக்தியின் வடிவமே போற்றி

    ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி

    ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி

    ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் மங்கையரின் கர்ப்பத்தை காக்கின்றாய் போற்றி

    ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி -100

    ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி

    ஓம் குலம் வாழ மகவருளும் மாதே போற்றி

    ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி

    ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி

    ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி

    ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி

    ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி

    ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி, போற்றி!

    • ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும்.
    • திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும்.

    பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்பதனால், அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல், துர்க்கா தேவி ஆலயம் சென்று வழிபடுதல் கஷ்டங்களைக் குறைக்கும்.

    திருவாதிரைக்கு பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும். மேலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும். குடும்பப் பிரச்சினைகள் என்றால் துர்க்கா தேவி வழிபாடும், பிரச்சினை தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ திருவனந்தபுர ஆண்டவரை வழிபடுவதும் பலன் தரும்.

    திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும். பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம். பரணி, சித்திரை நட்சத்திரம் போலவே அவிட்ட நட்சத்திரம் யோகம் தரும் நட்சத்திரமாகும். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களாலும் நன்மைகள் கிடைக்கும்.

    பூரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதியின் பெயர்கள் ஆகாது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம், தைரியம் மனம் இருப்பார்கள், தான தர்மம், காரியங்களில் முழுமையான ஈடுபாடு கொண்டு இருப்பார். நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் தலத்தில் சிவதீர்த்தம், நாகதீர்த்தம், ஞான பிரம்மா தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம், குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திரம் இவ்வளவு சிறப்பு பெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை முதல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர்ததூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிதீதேஸ்வரர் ஆலயம் ஆகும்.

    இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளான்று இத்தலத்தில அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பேறு பெறலாம். இதற்கு ஆடி பூரம் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    • ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும்.
    • ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

    சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர். எனினும் ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அந்த முதல் மூன்று நாட்கள் 'நதி ரசஜ்வாலா'' எனப்படும். இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களாகும்.

    ஜீவநதியான கங்கையில் எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை. மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காகவும் இருக்கும். எனவே ஆடி முதல் தேதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால், கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம்.

    ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள். ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள். இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைக்காப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதத்தின் சிகரமாகத் திகழ்வது ஆடித்தபசு விழா. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடை பெறும். தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர- நாராயண ராகக் காட்சி தந்த நாள் ஆடி பௌர்ணமி நாளாகும். காவேரிக் கரையோர மக்கள் ஆடி 18 அன்று காவேரி அன்னையை வழிபாடு செய்வார்கள். காவேரி அம்மனுக்கு இந்தச் சமயத்தில் மசக்கை ஏற்பட்டிருப்பதாக ஐதீகம்.

    அதனால் சித்திரான்னங்களான புளியஞ் சாதம், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் கலவைச் சாதம், பழம், வெற்றிலைப் பாக்கு, காதோலை, கருகமணி என்று காவேரி நதிக்குப் படைத்து, சிறிதளவு ஓடும் காவேரி நதிக்கு சமர்ப்பிப்பார்கள். காவேரி நதியை வழிபடும்போது, மஞ்சள் தடவிய நூலினை வைத்துப் படைத்து, பிறகு பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிந்துகொள்வது வழக்கம்.

    ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்வார். காலையில் சுமார் பத்து மணிக்கு ஸ்ரீரங்கம் தென்புறத்தில் உள்ள அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். பிறகு மாலையில் கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள்.

    அந்த மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர். முருகப் பெருமானுக்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக் கோலம் காணும்.

    ஆடி மாதப் பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறுவர். அன்று வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதைகளை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும்.

    ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். மேலும் ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் கூடுவதுடன், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பர். கருடபஞ்சமி, நாகபஞ்சமி ஆகியவையும் ஆடி மாதத்திற்கு சிறப்பினைக் கூட்டுகின்றன. ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு என்றும் நிரந்தரம்!

    • ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.
    • ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் “நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும்.

    ஆடி முதல் வெள்ளி. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஒளவை நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார்.

    ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மகாலட்சுமி வழிபாடு: ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

    ×