என் மலர்
நீங்கள் தேடியது "பச்சை குத்துதல்"
- பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
அக்காலத்தில் பச்சை குத்துவது என்றால் பெண்களுக்கு தான் முதல் இடம். ஏன் என்றால் அவர்கள் தான் பிள்ளைகளை பெற்று தருபவர்கள். அவர்கள் ஆரோக்கியம் தான் ஒரு குடும்பத்தின் அரண். ஆதலால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தம் உடலில் இருந்து மட்டும் அல்லாது பிரபஞ்சத்திடமும் இருந்து அவர்கள் சக்தி பெற வேண்டியது ஆயிற்று. ஆகவேதான் பச்சை குத்திக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
பச்சை குத்துதல் என்றாலும் சிலருக்கு பச்சை, கருப்பு கலந்த பச்சையாக மாறும். ஒரு சிலருக்கு கருப்பு நிறத்தில் மாறும். அவரவர் தேகத்தை பொறுத்து நிறம் வேறுபடும். ஆனாலும் பிராதமாக இருப்பது கருப்பு நிறமே. கருப்பு என்பது பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி கொண்டது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். பிரபஞ்ச ஆற்றலை சரீரத்தில் பிரவேசிக்க செய்ய நம் முன்னோர்களால் வகுத்த ஓர் அருமையான யுக்தி என்றே பச்சைக் குத்துவதை சொல்லலாம்.
மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைத்து அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி நீர் கலந்து அதனை பசையாக செய்து, பின் கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி விடவேண்டும். இது எந்நிலையிலும் அழியாது.
பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
தற்போது டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்துகிறார்கள். அதில் ரசாயனம் கலந்துள்ளதால் பாதிப்பானதே. மெகந்தி என்று பெண்கள் விசேஷங்களுக்கு போடுவதும் ஆபத்தான செயற்கை ரசாயனமே.
-ஜீ. சரவண குமார்