search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஹாரிகா"

    • நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர்.
    • நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

    உடலை மிகவும் ஃபிட்டாக மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்துபவர் நடிகர் அதர்வா.

    நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர். வெப் தொடர் மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றது.

    இதற்கிடையில் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக 'டிஎன்ஏ' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார்.

    நிஹாரிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நிஹாரிகா நகைச்சுவை பாணியில் வீடியோகளை வெளியிடுவதில் திறம் பெற்றவர் .

    அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிஹாரிகா 5 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறம் பெற்றவர்  அதனால் இவர் எந்த மொழியிலும் நடிகையாக நடித்து வளம் வர வாய்ப்பு அதிகம். இவர், அதர்வா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேசமயம் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகமானவர் நிஹாரிகா.
    • இவர் சைதன்யா என்பவரை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா, தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.

    தெலுங்கில் வெளியான 'ஓக்க மனசு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2016 முதல் 2019ம் ஆண்டு வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நிஹாரிகா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    நிஹாரிகா, சைதன்யா என்பவரை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடந்த இவர்களது திருமணத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் இடையே சிறு சிறு பிரச்சினை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்து நிஹாரிகா தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



    அதிகாரப்பூர்வமாக விவாகரத்து உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண போட்டோக்களை நீக்கி விட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். நடிகை நிஹாரிகா, விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    ×