என் மலர்
நீங்கள் தேடியது "துர்கா தேவி"
- சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும்.
- பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம்.
பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்பதனால், அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல், துர்க்கா தேவி ஆலயம் சென்று வழிபாடுதல் கஷ்டங்களைக் குறைக்கும்.
திருவாதிரைக்கு பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும்.
மேலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும்.
குடும்பப் பிரச்சினைகள் என்றால் துர்க்கா தேவி வழிபாடும், பிரச்சினை தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ திருவனந்தபுர ஆண்டவரை வழிபடுவதும் பலன் தரும்.
திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும்.
பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம். பரணி, சித்திரை நட்சத்திரம் போலவே அவிட்ட நட்சத்திரம் யோகம் தரும் நட்சத்திரமாகும். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களாலும் நன்மைகள் கிடைக்கும்.
பூரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதியின் பெயர்கள் ஆகாது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம், தைரியம் மனம் இருப்பார்கள், தான தர்மம், காரியங்களில் முழுமையான ஈடுபாடு கொண்டு இருப்பார். நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் தலத்தில் சிவதீர்த்தம், நாகதீர்த்தம், ஞான பிரம்மா தீர்த்தம், இந்தி தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம், குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திரம் இவ்வளவு சிறப்பு பெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை முதல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர்ததூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிதீதேஸ்வரர் ஆலயம் ஆகும்.
இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளான்று இத்தலத்தில அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை போறு பெறலாம். இதற்கு ஆடி பூரம் உகந்த நாளாக கருதப்படுகிறது.
- மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.
மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.
ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.
10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.
இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.
இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
"தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.
இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.
முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.
- இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
- இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.
இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.
அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.
மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
- நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
- அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,
அடுத்த 3 நாட்கள் மஞ்சள்
நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.
வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:
முதல் நாள் பச்சை,
இரண்டாம் நாள் மஞ்சள்,
மூன்றாம் நாள் நீலம்,
நான்காம் நாள் கருநீலம்,
ஐந்தாம் நாள் சிவப்பு,
ஆறாம் நாள் கிளிப்பச்சை,
ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,
எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,
ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.
- பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
- அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்
- மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்
பகைவனை வெல்ல - காளியை வழிபடவும்.
செல்வம் விரும்பினால் -சண்டியைப் பூசிக்கவும்
அரசர்களை மயக்க -சாம்பவி பூசை செய்யவும்
இன்னல், எளிமை அகல -துர்க்கையை வழிபடவும்
போரில் வெற்றிபெற -துர்க்கையை வழிபடவும்
கொடும் பகைவனை அழிக்க -துர்க்கையை வழிபடவும்
மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்
மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்
நோய் விலக -ரோகிணியை வணங்கவும்
- லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
- ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு
துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.
முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும்,
கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து வழிபடுகிறோம்.
துர்காதேவி துன்பங்களை போக்குபவள்.
லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
நல்லறிவு இருந்தால் தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால்,
அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள்,
ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே
இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
- உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
- வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியில் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து,
அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு
தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.
இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன்
வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
பெண்கள், சிறுவர் , சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை
நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.
இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.
தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.
நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வ பொம்மைகளை வைத்து மகிழ்வது
தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.
இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும்.
அம்பிகையின் சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
- வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
- வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.
துர்க்கை நெருப்பின் அழகு.
ஆவேசப்பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள்.
வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
இவளைக் "கொற்றவை" என்றும், "காளி" என்றும் குறிப்பிடுவார்கள்.
வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.
மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள்.
இவையே "நவராத்திரி" எனப்படுகின்றன.
அவனை வதைத்த பத்தாம் நாள் "விஜயதசமி"
மகிஷனை வதைத்தவள் "மகிஷாசுரமர்த்தினி"
மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் இருக்கிறது.
நவ துர்க்கை
1. வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :
1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.
- லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
- முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.
லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.
அஷ்ட லட்சுமிகள்
1. ஆதிலட்சுமி, 2, மகாலட்சுமி, 3. தனலட்சுமி, 4. தானியலட்சுமி, 5. சந்தானலட்சுமி, 6. வீரலட்சுமி, 7. விஜயலட்சுமி, 8. கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.
இடை மூன்று நாள் நிவேதன வினியோகம்.
4. கதம்ப அன்னம், 5. தயிர் சாதம், 6. தேங்காய் சாதம்.
- சரஸ்வதியை “ஆற்றங்கரை சொற்கிழத்தி” என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன
- அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.
சரஸ்வதி வைரத்தின் அழகு.
அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.
ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதியை "ஆற்றங்கரை சொற்கிழத்தி" என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவளுக்குத் தனிக் கோவில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.
அஷ்ட சரஸ்வதிகள்
1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.
கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்:
7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.
- பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
- இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள்.
இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.
பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய
மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.
அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.