search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிரன்யகசிபு"

    • அவதார நாயகன் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனிச் சிறப்பு உண்டு.
    • பிரகலாதனின் நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளிவந்தவர்தான் நரசிம்மர்.

    சிங்கமுகம், மனித உடல், பார்ப்பதற்கு பயம் காட்டும் கோரைபற்கள் கொண்டவர்தான் நரசிம்மர்.

    அவதார நாயகன் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனிச் சிறப்பு உண்டு.

    எப்போதுமே தெய்வங்கள் ரிஷிகள், ஞானிகள், முனிவர்களின் தவத்திற்கும், பிரார்த்தனைக்குமே தரிசனங்கள் தந்ததாய் புராணங்கள் சொல்கிறது. ஆனால் எந்த வேண்டுகோளும் இல்லாமல், வேண்டுதலும் இல்லாமல், ஒரு சிறுவனுக்காக வந்த அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    ஹிரன்யகசிபுவின் கோபமான கேள்விக்கு பதில் சொன்ன பிரகலாதன், நான் வணங்கும் ஹரி... தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையோடு சொன்னான். அந்த நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளிவந்தவர்தான் நரசிம்மர்.

    பைரவர், சக்கரத்தாழ்வார் போன்று நரசிம்மரும் பத்தர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். இவரை வணங்க எந்த பயமும், தயக்கமும் தேவையில்லை. நம்பிக்கை ஒன்றே பிரதானம்.

    பார்ப்பதற்கு பயம் காட்டும் உருவமாக இருந்தாலும் நாடியவர்களுக்கு ஒடிவருபவர் நரசிம்மர்.

    சிங்கம் கொடூர குணம் கொண்ட கொடிய விலங்குதான். எந்த விலங்காக இருந்தாலும் பசி வந்தால் கொன்று உண்ணும் குணம் கொண்டதுதான். ஆனால் அந்த கொடிய சிங்கத்தின்னுள்ளும் ஒரு மென்மையான மனம் உண்டு.

    தான் ஈன்ற குட்டிகளிடம் கடுமை காட்டுவதில்லை. கொஞ்சி விளையாடும், துள்ளி ஓடி விளையாட்டு காட்டும். அதுபோல்தான் நரசிம்மரும். அரக்கர்களுக்கு கொடியவராக இருந்தாலும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனியவர்.

    சரி.... நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

    பில்லி, சூன்யம், செய்வினைக்கோளாறுகள் உங்களை தீண்டாது.

    எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும்.

    எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்.

    பழகிய இடத்திலேயே பாதகம் நினைப்பவர்களை அடியோடு வேரறறுக்கும்.

    சிவரூபங்களில் பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு முக்கியமானவர். கோவிலை பூட்டிய பின் இவரிடம்தான் ஆலய சாவி அளிக்கப்படுவதாய் சொல்லப்படுகிறது.

    அதேபோல் கோவிலில் உள்ள விக்ரகங்களை, கும்பாபிஷேக காலங்களில் மருந்து சாற்றுவதற்காக மூலஸ்தானத்தில் இருந்து பெயர்த்து எடுக்க நரசிம்ம மந்திரத்தை ஜெபம் செய்தபிறகே எடுப்பார்கள்.

    ×