என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப் ஸ்டோர்"

    • கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்தனர்.
    • இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

    இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.

     

    கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பயனர்களுக்கு அதிவேகமாக கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் கரணமாக நிதி சார்ந்த முன்னணி செயலிகள் பட்டியலில் டாப் 20 இடத்தை அடைந்தது. பல்வேறு பயனர்கள், கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    மேலும் கடன் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் பெற்ற கடன் விவரங்களை, அவர்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி விடுவதாக கடன் செயலிகள் மிரட்டியதாகவும், குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, ஆப்பிள் டெவலப்பர் திட்ட ஒப்பந்தத்தை இந்த கடன் செயலிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த வகையில், போலி விளம்பரங்கள் மூலம் கடன் கொடுத்து, பிறகு வாடிக்கையாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வந்த கடன் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கப்பட்டன.

    • டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

    சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.

    டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

    ×