என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணர் கோவில்"

    • தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது.
    • கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டம் கருங்கல் உள்ள திப்பிறமலையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டது.

    தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது. இது தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு கருவில் இருக்கும்போதே விஸ்வரூப காட்சி அளித்த நிலையாகும். எனவே இந்த கோவில் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் சிலை முற்காலத்தில் தானாக வளர்ந்ததாகவும், இப்போதுள்ள கோவில் மூன்றாவது தடவையாக பிரித்து கட்டப்பட்டதாகவும், தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை முற்காலத்தில் பூஜை செய்து வந்த பூசாரி குறைபடுத்தி சிலையின் வளர்ச்சியை நிறுத்தியதாகவும் கதை ஒன்று சொல்கிறது.

    நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு வேண்டுதலை நிறைவேற்றி சகல ஐஸ்வரியங்களையும் கிருஷ்ணர் அள்ளி அள்ளி தருவதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கும் சிவன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி அருள்பாலிப்பதாக தேவபிரசன்ன தகவல்கள் கூறுகின்றன.

    சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் கூடிய அரசமரத்தை 9 முறை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி பாவங்களில் இருந்து விடுபடலாம் என சிவனடியார்கள் கூறு கிறார்கள்.

    அடுத்ததாக அங்கு நிற்கும் ஆல மரத்தடியில் வன சாஸ்தாவும் அருள்பாலிக்கிறார். இந்த 3 கோவில்களும் 3100 வருடங்கள் பழமையானவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு செய்யப்படும் பூரண சந்தன காப்பு அலங்காரம் கண்கொள்ளா காட்சி ஆகும். அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    • `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அழகாய் காட்சி தருகிறார்.

    வடசென்னை, முத்தியால் பேட்டையில் இத்திருக்கோயில் பவளக்காரத் தெருவில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான தலம் என்று சொல்லப்படுகிறது.

    மூலவர் - ருக்மிணி பாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

    தனி சன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், சுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

    திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாசனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

    ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

    "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.

    • கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் ஆசியாவிலேயே மிள நீளமானது.
    • நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர் அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார். மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.

    அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும் ஒருங்கே உள்ளனர்.

    சென்னை கோபாலபுரம்: ஸ்ரீவேணு கோபால சுவாமி கோவில் 1917-ம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது, பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.

    அரசாங்க அனுமதியுடன் அதை சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோவில் உள்ள கோபாலபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று தொடங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால் சுவாமி

    திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமவாரம் என்பார்கள்) இத்தலத்தில் உள்ள அரச மரத்தை வழிபட்டு வர... விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    வேப்பங்கொண்ட பாளையம்: ஸ்ரீகிருஷ்ணன் கோவில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம்.

    ஒருகாலத்தில் வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

    இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    மதுரையில் 2 கிருஷ்ணர்கள்:

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவில், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில். மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீதகிருஷ்ணன். இரண்டாவது கிருஷ்ணர் குடியிருப்பது ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில் உள்ளது.

    மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால் வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றும் ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

    புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்த கிருஷ்ணனை மனதார பிரார்த்தித்து, அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோவிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. 9-ம் நாளன்று 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க, முளைப்பாரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அன்று ஆசியாவிலேயே மிள நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்த கோவிலின் புதிய பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணர். 15 நாட்கள் கிருஷ்ணா ஜெயந்தி விழா இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

    காவளம்பாடி:  கோபாலகிருஷ்ணர் கோவில் நாகை மாவட்டத்தில் புகழ் பெற்ற கோபாலகிருஷ்ணர் கோவில் உள்ளது. காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம்.

    பாமாவுடன் சோலையில் வீற்றிருக்க ஆசைப்பட்ட கிருஷ்ணர் அதற்குரிய இடத்தை தேடியபோது இத்தலத்தை தேர்வு செய்து அமர்ந்தாராம். பாமாவுக்கு மிகவும் பிடித்த பூ பாரிஜாதம். அந்த பாரிஜாதம் பூவை இத்தலததில் கிருஷ்ணர் நட்டதாக புராணங்கில் கூறப்பட்டுள்ளது.

    மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய கிருஷ்ணர் கோவிலாகும். இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் விரலில் தாங்கிப் பிடித்து இருப்பதாக ஐதீகம்.

    இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வந்தால் பொழுதுபோக்கோடு புண்ணியத்தையும் பெற முடியும்.

    பஞ்ச கிருஷ்ண தலங்கள்:

    தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. என்றாலும் 5 கிருஷ்ணர் கோவில்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புடன் திகழ்கின்றனர். அந்த 5 கிருஷ்ணர் தலங்கள் விவரம் வருமாறு:-

    1. திருக்கோவிலூர்

    2. திருக்கண்ணபுரம்

    3. திருக்கண்ணங்குடி

    4. திருக்கண்ணமங்கை

    5. கபிஸ்தலம்ஈரோடு மயிலாடி

    • கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார்.
    • ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன.

    சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் மிகப்பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. முதலாம் கரிகால் சோழன் கட்டியதால் இந்த தலத்து கடவுள் கரிகிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறது.

    ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன. அதை கண்டு அந்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஒலித்த அசரீரியில், ''பசும்பாலால் இந்த குன்றை கழுவுங்கள் கிருஷ்ணர் தோன்றுவார்'' என்று கேட்டது.

    கிராம மக்களும் அப்படியே செய்ய கிருஷ்ணர் தென்பட்டார். அப்போது ஒரு பக்தர் மிகுந்த ஆர்வத்துடன், அங்கு மண்ணைத் தோண்டினார். அப்போது கிருஷ்ணர் இதற்கு மேல் தோண்டாதே என்று உத்தரவிட்டார். இதனால் இத்தலத்தில் கிருஷ்ணர், சாதாரண மனிதர்கள் போல தரையில் கால் ஊன்றி நிற்கிறார்.

    பசுக்கள் பால் சுரந்து காட்டி கொடுத்து கிருஷ்ணரை வெளிப்படுத்தியதால் இத்தலம் ஆயர்பாடி என்றும் அழைக்கப்படுகிறது.

    புராதன சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் பால், பழம் வைத்து வழிபட்டால் கேட்டவரத்தை கிருஷ்ணர் தருவார். இங்கு ராமர், கிருஷ்ணர் இருவரும் தனி தனி சன்னதிகளில், தனி தனி கொடி கம்பங்களுடன் உள்ளனர். கிருஷ்ணை பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

    பவளக்கார தெருவில் பாசமிகு கிருஷ்ணர்

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள், நன்மங்கலம் நீலவண்ண பெருமாள் போன்று பல இடங்களில் கிருஷ்ணருக்கு கோவில்கள் உள்ளன. அவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. முத்தியால் பேட்டையில் உள்ள ஸ்ரீவேணு கோபால கிருஷ்ணசாமி கோவில்.

    பவளக்காரத் தெருவில் உள்ள இத்தலத்தில் கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார். அவரது இருபுறமும் பாமாவும் ருக்மணியும் உள்ளனர். இத்தகைய தோற்றத்தில் கிருஷ்ணர் இந்த தலத்தில் விசேஷமாக அருள் பாலிக்கிறார்.

    சிறிய கோவிலாக இருந்தாலும், நுழைவாயிலை நெருங்கியதுமே அதன் பழமை சிறப்பை பக்தர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

    ஸ்ரீகிருஷ்ணா என்ற நாமத்துடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ராமர், ஆஞ்ச நேயர், சீனிவாச பெருமாளுக்கு தனி தனி சன்னதி உள்ளது. சென்னையில் உள்ள கிருஷ்ணா பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இங்கு சென்று வழிபட்டால் உண்மையான மனநிறைவு ஏற்படும்.

    • குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.
    • இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீமநகர்.

    இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது ஸ்ரீ வேணு கோபாலகிருஷ்ணன் கோவில்.

    குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.

    எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும்

    பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால்,

    நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் என போற்றுகின்றனர்.

    மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் கலந்து கொண்டு, வெண்ணை அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால்,

    மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள். பூரண குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்சவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.

    • கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.
    • பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    திருக்கோவிலூர் கோவிலில், சத்யபாமா, ருக்மணி தேவியருடன் சாளக்கிராம மேனியராக அருள்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

    இவரையே ஆதி சேஷாத்திராதி பதியாகக் கருதுவதால், பெரும்பாலும் இவரை முதலில் தரிசித்து விட்டே உலகளந்த பெருமாளை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.

    பிரம்மோற்சவ காலத்தில் 10 நாளும் உற்சவம் நிகழும்.

    ரோகிணியில் ஸ்ரீ வேணுகோபாலனுக்குத் திருமஞ்சனம், புறப்பாடு, சேவை சாற்றுமுறை நடைபெறுகிறது.

    ஆவணி மாத வருச உற்சவமும் சிறப்பு நடைபெறும்.

    கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.

    • இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
    • திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும்,

    வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம்.

    ஒருகாலத்தில் வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

    இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

    இதனால் இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து,

    திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர் இந்த ஊர்க்காரர்கள்.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளில் திருவீதி உலா, சிறப்பு பூஜைகள், உறியடி உத்சவம் என இந்த தலம் அமர்க்களப்படும்.

    • இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.
    • எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும்,

    சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ண பெருமாள் ஆலயம்.

    சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க திருக்கோவில் இது.

    ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாகும்.

    இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும்.

    இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.

    இவருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி பிரார்த்தித்தால் மனக்கிலேசங்கள் அனைத்தும் விலகிவிடும்.

    எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

    ஸ்ரீகிருஷ்ணபெருமாளுக்கு சர்க்கரை பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து,

    வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நடந்தேறும்.

    ஸ்ரீ கிருஷ்ணபெருமானை வணங்கிவிட்டு தொழிலை தொடங்கினால் வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    • அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள்.
    • கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர் அனைவருடனும் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளார்.

    கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார். மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.

    அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும் ஒருங்கே உள்ளனர்.

    தனி சன்னதியில் உள்ள ராமருடன் சீதை, லட்சுமணர், பரதன், சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் இருக்கிறார்கள்.

    இப்படி கிருஷ்ணர் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு திறக்கப்பட்டது.
    • இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்கான்

    சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் மிகப்பெரியது ஈ.சி.ஆர். சாலையில் அக்கரையில் அமைந்துள்ள இஸ்கான் ஆலயமாகும்.

    1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்தேதி திறக்கப்பட்டது.

    காலை 7.15 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயம் திறந்து இருக்கும்.

    மகாபலிபுரம்

    மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய கோவில் கிருஷ்ணர் கோவிலாகும்.

    இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் விரலில் தாங்கிப் பிடித்து இருப்பதாக ஐதீகம்.

    இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வந்தால்,

    பொழுதுபோக்கோடு, புண்ணியத்தையும் பெற முடியும்.

    • பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.
    • விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    1917ஆம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது,

    பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.

    அரசாங்க அனுமதியுடன் அதைச் சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோவில் உள்ள கோபாலபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அன்று துவங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபால சாமி.

    அழகிய பசு நின்றிருக்க, நான்கு திருக்கரங்களில் புல்லாங்குழல் மற்றும் சங்கு, சக்கரங்களுடன்,

    அழகுறக் காட்சி தரும ஸ்ரீ வேணுகோபாலரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

    இந்த ஆலயத்தில் திருமாலின் பத்து அவதாரங்களையும் சித்தரிக்கும் வகையிலான வெள்ளிக்கவசம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, முழுவதும் தங்கத்தால் ஆன மண்டபம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்தை ஒட்டி, ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் அருகில் ஸ்ரீவராகமூர்த்தியும் காட்சி தருகின்றனர்.

    வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறும் ஆலயம் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரமான,

    கோகுலாஷ்டமி நாள் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் உள்ள அரச மரம் சிறப்புக்குரிய ஒன்று.

    இந்த மரத்தில் ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மூவரும் உறைந்திருப்பதாக நம்பிக்கை.

    திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமாவாரம் என்பார்கள்) இந்த மரத்தை வழிபட்டு வர,

    விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    • சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது.
    • இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    மீனாட்சி அரசாளும் மதுரையில் 2 கிருஷ்ணர் தலங்கள் சிறப்புடன் திகழ்கின்றன.

    மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது.

    சனிக்கிழமை தரிசனம் இங்கே விசேஷம்.

    திருமேனி முழுவதும் சந்தனக்காப்பும் திருக்கரத்தில் வெள்ளி புல்லாங்குழலுமாக,

    சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது.

    வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

    இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீதகிருஷ்ணன்.

    ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கே மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    ×