என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் நெருக்கடி"

    • சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது
    • சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது

    பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவுகிறது. சமீப காலமாக அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

    பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இலங்கை போன்று பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து அந்நாடு பல நாடுகளிடம் உதவி கோரியது.

    சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு பாகிஸ்தான் சம்மதித்த பிறகு, சுமார் ரூ.25 ஆயிரம் கோடி கடனாக வழங்கியுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் எதிர்கால விரிவான பொருளாதார நிலையை ஆராய்ந்த நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மீண்டும் ஒருமுறை இது போன்ற ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம், சிக்கலான மற்றும் பன்முகம் கொண்ட சவால்களை சந்தித்து ஒரு அபாயகரமான நிலையில் இருக்கிறது.

    இந்த சவால்களை எதிர்கொள்ள அந்நாட்டிற்கு அந்நிய வழிகளில் பல உதவிகள் தேவைப்படும். இது மட்டுமல்லாமல் ஐஎம்எஃப் நிதியும் மீண்டுமொரு முறை தேவைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

    மின்சார மற்றும் எரிபொருள் ஆகிய இரு துறைகளிலும் அந்நாடு பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஐஎம்எஃப் உடன் கடன் பெறுவதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நுகர்வோருக்கு கட்டணத்தை உயர்த்த சம்மதித்து உள்ளது.

    இதற்கு உள்நாட்டிலேயே பல எதிர்ப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
    • தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்

    அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.

    சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.

    ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.

    ×