என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை வேந்தர்கள்"

    • உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
    • அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.

    இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது.

    உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.

    அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

    தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையால் 2030-க்குள் அடையலாம் என்ற கல்வி வளர்ச்சியை நாம் இப்போதே அடைந்து விட்டோம்.

    உயர்கல்வி தர வரிசையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட மாடல் அரசின் நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நாம் உருவாக்க உள்ள மாற்றங்களின் பலன்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    நாட்டின் சிறந்த கல்வி ஆலோசகர்களுடன் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளோம்.

    தொழில்துறையினருடன் இணைந்து நாம் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். AI மற்றும் கிரீன் எனர்ஜி போன்றவை தான் பொருளாதார மாற்றங்களை மேற்கொள்கிறது.

    நமது பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

    நான் முதல்வன் திட்டம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
    • முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது. மேலும் முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம்.
    • துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் வரும் 16ம் தேதி பல்கலைக்கழகங்களின் அனைத்து துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×