search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி தண்ணீர்"

    • அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது.
    • கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடை பெற்றது.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஜூன் மாதம் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர் 9.1 டி.எம்.சி. இது உள்பட மொத்தம் 16.6 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் வழங்க வேண்டும். இதை வழங்கும்படி கர்நாடகத்துக்கு முறையாக உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக, வரும் ஜூன் 12-ந்தேதிக்கு பின்னர் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது. அதே சமயம், பருவமழை பெய்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் எனவும் கர்நாடகம் கூறியது.

    இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா நிலைமை குறித்து விளக்கினார்.

    அப்போது அவர் கூறு கையில், 'வருகிற தென் மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால் பிலிகுண்டுலுவில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இது கடந்த 15-ந்தேதி 1,100 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும், தற்போது இரு மாநிலங்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிர் சாகுபடி தொடங்கப்படாத நிலையில், தற்போதைய நிலை தொடரும். இருப்பினும், வருகிற 21-ந்தேதி நடைபெறும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் பிலுகுண்டுலுவில் வழங்கப்படாமல் இருக்கும் பற்றாக்குறை நீர் குறித்தும், கடந்த ஆண்டு நீர் கணக்கு குறித்தும் விவாதிக்கப்படும்' என்றார்.

    • விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பேசியது அவரது சொந்த கருத்து. அவர்களுடைய மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இடையிடையே அவ்வப்போது அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் கிடைப்பதற்கு வழி வகை செய்வார். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டிற்கான கர்நாடகத்தின் பருவமழை குறித்து விரிவாக ஆராயாமல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கிறது என்பதன் அடிப்படையில், ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீரினைத் திறந்துவிட்டதும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்.

    ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    விவசாயிகளின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்கவும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீரை விரைந்து பெற்று எஞ்சிய பயிர்களை காப்பாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×