search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாப்ஸி"

    • ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    • அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஆசியாவின் பெரும் பணக்காரர்முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானிக்கு ராதிகா மெர்ச்செண்டுடன் கோலாகலமாக திருமணம் நடந்த முடிந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான், சல்மான் கான் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கலந்து கொண்டது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

     

    இந்நிலையில் ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வளம் வரும் டாப்ஸி தான் ஏன் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று மனம் திறந்துள்ளார்.

     

    அவர் கூறியதாவது, எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது; திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன்; எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன்; அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி படுகவர்ச்சியாக வருகை தந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    • அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது.

    சென்னை:

    ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிங்க் படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்த டாப்ஸி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார்.

    கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. அடுத்ததாக ஹசின் தில்ருபா 2 படத்தில் நடித்துள்ள டாப்ஸி விரைவில் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி படுகவர்ச்சியாக வருகை தந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகமாக ரசிகர்கள் ஷேர் செய்து நடிகை டாப்ஸியை திட்டினர்.

    இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை. தற்போது கருப்பு உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், இந்த அடக்கம் ஒடுக்கம் கூட நல்லாதான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்துக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் போட்டுள்ளனர்.

    இவர் சமீபத்தில் டென்மார்க் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://www.maalaimalar.com/cinema/cinemanews/taapsee-excites-her-fans-by-posting-sexy-photos-726625?infinitescroll=1

    • ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.
    • நடிகை டாப்ஸி தற்போது கே-13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் டாப்ஸி தற்போது நடித்து வரும் தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அருள்நிதி-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கே-13 படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் டாப்ஸி நடித்து வருவதாகவும் இப்படத்திற்கு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×