என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்"

    • செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம்.
    • மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கணக்கம்பாளையம் வாஷிங்டன்நகரில் 300-வது கிராமிய சேவைத் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம். ஆனால் ஒரு அரைமணி நேரம் யோகாவுக்கு செலவிட நாம் தயாராக இல்லை. எந்த சூழ்நிலையிலும் மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதுதான் மனவளம். அதுவே மனநலம். மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.பணமும், பதவியும் வரும்போது இருக்க வேண்டியது பணிவு மட்டும்தான். பணிவுடன் இருப்பவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்
    • பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரும் சென்றனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அக்காள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

    இதையறிந்து மராட்டிய கவர்னரான சி.பி. ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் உள்ள செல்வியின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார். அங்கு முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதா கிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்.

    அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி ஆகியோரும் சென்றனர்.

    ×