என் மலர்
நீங்கள் தேடியது "ஐயப்பன் மகிமை"
- செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
- ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
மகர ஜோதியே ஐயப்பா!
ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.
'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.
இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.
இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.
அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.
இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.
ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.
திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.
அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.
இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.
உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.
"தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.
- சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
- முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!
ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.
பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,
கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,
தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,
வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,
ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்
திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.
இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.
நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.
முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.
தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.
ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.
அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.
நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.
ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.
ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.
ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.
"எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்
ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்
ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்
ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்
ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"
- முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
- சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பு.
1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.
2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.
5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.
அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.
தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

வழிநடை சரணங்கள்
சுவாமியே ஐயப்போ- ஐயப்போ சுவாமியே
பகவானே பகவதியே- பகவதியே பகவானே
தேவனே தேவியே- தேவியே தேவனே
வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே
பகவான் சரணம்- பகவதி சரணம்
பகவதி சரணம்- பகவான் சரணம்
தேவன் சரணம்- தேவி சரணம்
தேவி சரணம்- தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா- தேக பலம்தா
தேக பலம்தா- பாத பலம்தா
கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்
தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா
சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்
யாரைக்காண- சாமியை காண
சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதி- சுவாமிக்கே
நெய் அபிஷேகம்- சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே
முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே
காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே
கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே
கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு
யாரோட கட்டு- சாமியோட கட்டு
சாமிமாரே- ஐயப்பமாரே
ஐயப்பமாரே- சாமிமாரே
பம்பா வாசா- பந்தள ராஜா
பந்தள ராஜா- பம்பா வாசா
சாமி அப்பா ஐயப்பா- சரணம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா- வந்தோம் அப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா- பம்பா வாசா ஐயப்பா
கரிமலை வாசா ஐயப்பா- கலியுக வரதா ஐயப்பா