என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலகம்"

    • தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது.
    • வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.

    முகத்தில் அம்மை வடு, தழும்பு, காயங்கள் போகணுமா ? இதை செய்துபார்த்து பயன் அடையுங்கள்

    உடலில் காயங்களினால் ஏற்படும் தழும்பு ஆறாமல் இருந்தால் முகம், உடல் என எந்த இடத்தில் இருந்தாலும் அது அசெளகரியாகவே நினைக்க தோன்றும். அதிலும் அவை முகத்தில் வந்தால் அழகையும் குறைத்து காட்டும்.

    தழும்புகள், வடுக்கள், காயங்கள் என எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பை குறைத்து சருமம் பழைய தோற்றத்தை பெறுவதற்கு வீட்டு வைத்தியங்கள் உண்டு. எளிமையான முறையில் இதை சரி செய்ய உங்களுக்கு இந்த வைத்தியம் உதவும்.

    எலுமிச்சை

    எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த இவை உதவும்.

    எலுமிச்சை சாறு - 3 அல்லது 4 டீஸ்பூன் அளவு நீர்த்தது

    காட்டன் பஞ்சு - சிறு உருண்டை

    பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் க்ளென்ஸ் செய்யுங்கள். பின்னர் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும். தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

    சிலருக்கு எலுமிச்சை சாறு சருமத்தில் ஒவ்வமையை உண்டாக்கலாம். அதனால் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

    தேன்

    தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது. தேனில் இருக்கும் பண்புகள் காயங்களை குணப்படுத்தக்கூடியவை. இதனுடன் பேக்கிங் சோடா இணைந்து பயன்படுத்தும் போது அது சரும வடுக்களை மங்கி காட்டும்.

    தேன் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

    வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு

    சுத்தமான மெல்லிய துணி - தேவைக்கு

    தேனையும் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்யலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

    வெங்காயச்சாறு - தேவைக்கு

    சிறிய வெங்காயமாக இருக்கட்டும். வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம். வெங்காயம் சருமத்துக்கு பயன்படுத்தினால் பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். கண்டிப்பாக மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

    சோற்றுக்கற்றாழை

    சோற்றுக்கற்றாழை அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டவை. இது சரும எரிச்சலை போக்க கூடியது. சருமத்தில் உண்டாகும் வடுக்களையும் போக்கும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.

    சோற்றுக்கற்றாழை மடல்களில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். இதற்கு பிறகு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.

    நெல்லிக்காய்

    நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய சிறந்த பொருள். இதை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது வடுக்களை குறைக்க செய்யும். இது நாள்பட்ட தழும்புகளையும் வடுக்களையும் மாற்றி சருமத்தை புதியது போல் ஜொலிக்க செய்யும்.

    நெல்லிக்காய் பொடி (கொட்டை நீக்கியது)

    ஆலிவ் ஆயில் - தேவைக்கு

    நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.

    உருளைக்கிழங்கு சாறு

    உருளைக்கிழங்கு சாறு பைட்டோகெமிக்கல் சருமத்தில் இருக்கும் வடுக்களை மந்தமாக்க செய்யும். இது பிக்மெண்டேஷன் போக்குவதோடு கருவளையம், முகப்பரு மற்றும் பருக்களையும் போக்கும் தன்மை கொண்டவை. இது சரும நிறத்தை மீட்டு கொடுக்கும்.

    உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.

    தழும்புகள், வடுக்களை போக்க வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுக்கலாம். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை அதன் தீவிரம் பொறுத்து மந்தமாக்கும் அல்லது குணப்படுத்தவும் செய்யும்.

    • தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
    • வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

    உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

    இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

    பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.

    அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:-

    தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    செம்பருத்தி பூ- இரு 10 பூ

    செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி

    வேப்பிலை- ஒரு கைப்பிடி

    மருதாணி இலை- ஒரு கைப்பிடி

    சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)

    சோற்றுக்கற்றாலை- ஒரு கப்

    வெந்தயம்- 2 டீஸ்பூன்

    பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)

    கருசீரகம்- 2 டீஸ்பூன்

    வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

    முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

    • மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும்.
    • மாதவிடாய் சுகாதாரத்தை சுத்தமாக வைத்திருப்பதை போல் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

    பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவு முறைகள் எவை என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.

    பூப்படைந்த குழந்தைகளுக்கு மன ரீதியிலும், உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும். உணவுமுறைகள் இதனை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம்.

    கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் உளுந்தில் வடை, களி, சத்துமாவாக பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்கு கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும், சீரான மாதவிடாய்சுழற்சிக்கும், ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

    நல்லெண்ணெய் - நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும்.

    கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்து சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெற கம்பு உறுதுணை புரியும்.

    பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சத்துமாவாக சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

    அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது.

    சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

    கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    சத்துகள்

    பூப்படைந்த முதல் 3 நாட்கள் நாம் தர வேண்டியது என்னவென்றால் வேப்பங்கொழுந்தும் மஞ்சளும்தான். இந்த இரண்டையும் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு மூன்று நாள்களும் தர வேண்டும். உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறவும், தொற்றுகள் ஏற்படாமலும் உடலை சுத்தப்படுத்த இந்த உருண்டை மிகவும் உதவும்.

    புரதச்சத்து

    இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. இந்த மூன்றையும் நாம் சம அளவில் தர வேண்டும். எள் உருண்டை பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்கலாம். இதை முதல் இரு தினங்கள் கொடுக்கலாம். ஒரு வேளை ரத்த போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்திவிடலாம். எள்ளுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து நாம் தரும்போது இதில் இருக்கக் கூடிய ஜின்க், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நாம் கொடுத்தால் அதிக ரத்த போக்கை சீர் செய்ய இது உதவுகிறது.

    பனை வெல்லத்தை காய்ச்சி வறுத்த எள்ளுடன் உருண்டை செய்து கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் கற்றாழையை நாம் தர வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு பனை வெல்லத்துடன் சேர்த்து நாம் மோர் போல் அடித்து தரலாம். மோருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து கொடுக்கலாம்.

    இதை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து சீரான ரத்த போக்கு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். இது அதிகரித்தால் சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதை சரி செய்ய முள்ளங்கி, சுரக்காய், வெள்ளை பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளைப்படுதல் இல்லாமல் உடல் உஷ்ணம் குறைந்து சீரான ஹார்மோன் பேலன்சை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனை அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    • கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும்.
    • சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும்.

    கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.

    தேவையான பொருட்கள்:

    சீயக்காய்-1 கிலோ

    வெந்தயம்- 100 கிராம்

    பாசிபயறு- 200 கிராம்

    பூந்திகொட்டை-100 கிராம்

    நெல்லிக்காய் (காய்ந்தது)- 50 கிராம்

    ஆவரம்பூ- 50 கிராம்

    செம்பருத்தி பூ- 20 பூ

    நாட்டு பன்னீர் ரோஜா- 20 பூ

    வெட்டிவேர்- 25 கிராம்

    செய்முறை:

    மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஒவ்வொரு எண்ணெய் குளியளின் போதும் இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த பொடி முடியை வளரச்செய்வது மட்டுமல்லாமல், பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம், முடி கொட்டும் பிரச்சினை, நரை முடி மற்றும் கூந்தலுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். செய்து பாருங்கள்.

    சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.

    சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

    கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.

    சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.

    சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.

    • மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
    • நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    மன அழுத்தம் என்பது உங்களை பதட்டமாகவும், விரக்தியாகவும், பயமாகவும் அல்லது மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும் எந்தவொரு நிகழ்வு அல்லது சூழ்நிலைக்கும் ஒரு உணர்ச்சி அல்லது உடல் ரீதியான எதிர்வினையாக இருக்கலாம். எப்போதாவது ஏற்படும் மன அழுத்தங்கள் உங்கள் செயல்திறனை சாதகமாக பாதிக்கும். அதே வேளையில், நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    ஆண்களும், பெண்களும் மன அழுத்தத்தை அனுபவித்தாலும், அது இரு பாலினத்திலும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. மன அழுத்தம் ஆண்களை விட மிகவும் தீவிரமான வழிகளில் பெண்களை பாதிக்கும். எளிமையான வார்த்தைகளில், மன அழுத்தம் ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு வழிகளில் அழிக்கக்கூடும்.

    பெண்களுக்கு மன அழுத்தம் எப்படி தீங்கு விளைவிக்கும்

    பெண்களுக்கு மன அழுத்தத்தின் மிக முக்கியமான விளைவு அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வில் உள்ளது. அவர்கள் மன அழுத்தமில்லாத நாட்களில் இருப்பதை விட இது அவர்களை எரிச்சல், மனநிலை, சோகம் அல்லது அதிக உணர்ச்சிவசப்பட வைக்கும். நீண்ட கால மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த அழுத்தச் செயல்பாடுகளைக் கூட அவர்கள் அதிகமாகக் காணலாம்.

    சிலர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு திரும்பலாம், இதையொட்டி, பரவலான சுகாதார நிலைமைகளை உருவாக்கலாம். தலைவலிக்கான பொதுவான தூண்டுதல் எந்த வகையான மன அழுத்தமும் ஆகும். இது தலையில் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இது தோள்பட்டை வலிக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டில் தலையிடலாம்.

    ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமனிகளை சுருக்கி, போதுமான அளவு ரத்தத்தை இதயத்தை அடைவதை கடினமாக்குகிறது.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் பீஸ்ஸாக்கள், சாக்லேட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை உண்ணலாம், இது அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பிற பழக்கங்கள் பல்வேறு இதய பிரச்சினைகள் மற்றும் மாரடைப்புகளுக்கு வழிவகுக்கும்.

    கார்டிசோல் உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பசியைத் தூண்டுகிறது. இது அவர்களுக்கு சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏங்க வைக்கும், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட உணவு, உணவை தவிர்ப்பது மற்றும் நொறுக்குத் தீனிகளை அடைவது போன்ற ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்தலாம்.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளாவிட்டாலும், கார்டிசோல் அவர்களின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, இதனால் அவர்கள் வழக்கத்தை விட குறைவான கலோரிகளை எரிக்கிறார்கள்.

    மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்று பல மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கார்டிசோல் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் தலையிடலாம் மற்றும் வழக்கத்தை விட இலகுவான, கனமான அல்லது அதிக வலியுடன் கூடிய காலங்களுக்கு வழிவகுக்கும். கார்டிசோல் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இது மாதவிடாய்களை சிறிது நேரம் இடைநிறுத்தலாம்.

    மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, நீண்ட காலத்திற்கு அதிக கார்டிசோல் அளவு மாற்றத்தை கடினமாக்குகிறது, இதனால் சூடான ஃப்ளாஷ்கள், தூக்கம் மற்றும் பிற அசௌகரியங்கள் ஏற்படலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

    நீண்ட கால மன அழுத்தம் கார்டிசோலை பாலியல் ஹார்மோன்களை அடக்கி, ஒருவருடைய பாலியல் ஆசைகளை பாதிக்கும். அவர்கள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள் மற்றும் மகிழ்ச்சியை உணர மாட்டார்கள். வழக்கமான நாட்களில் உச்சக்கட்டத்தை அடைவது பெண்களுக்கு கடினமாக இருந்தாலும், மன அழுத்தத்தால் அதை மேலும் கடினமாக்கலாம்.

    மன அழுத்தம் அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், அது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கும் வழிவகுக்கும். சிலருக்கு, மன அழுத்தம் அவர்களின் பசியை கொன்று, எடையை குறைக்கும். மன அழுத்தத்தின் போது ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குடல் நுண்ணுயிரியை தொந்தரவு செய்யலாம்,

    மேலும் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை பாதிக்கும். மன அழுத்தம் பெண்களுக்கு இருக்கும் தோல் நிலைகளை மோசமாக்கும். இது முகப்பரு வெடிப்பு, கடுமையான அரிப்பு, சொறி மற்றும் படை நோய்க்கு வழிவகுக்கும். பெண்கள் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் கடுமையான முடி உதிர்வையும் சந்திக்கின்றனர்.

    அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள் தூங்குவது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும், இதையொட்டி, உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை உண்டாக்கும். தூக்கமின்மை உள்ள பெண், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அன்றாட பணிகளை செய்வதில் சிரமப்படுவார்.

    மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிக அளவு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது மற்றும் ஒருவரை தொற்று மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தை அனுபவிக்கும் ஒரு பெண் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

    • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
    • மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

    மன அழுத்த ஹார்மோன்கள் பெண்களின் உடலை ஆண்களை விட வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த பகுதியில் அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், பெண்களில் உள்ள லிம்பிக் அமைப்பு ஆண்களை விட பெண்களில் ஆழமாக உள்ளது. இது ஆண்களை விட உணர்ச்சிகளை ஆழமாக உணர வைக்கிறது. அது அவர்களை நீண்ட நேரம் புண்படுத்தும் மற்றும் வலிமிகுந்த சூழ்நிலைகளை நினைவில் வைத்திருக்கவும், அவற்றை பற்றி சிந்திக்கவும் மற்றும் வலுவான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

    பெரும்பாலும், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, அதே நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களை அதிகமாக உணர வைக்கும். மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது போன்ற சூழ்நிலைகள் அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலைகள் மன அழுத்தத்தை உருவாக்கி, நீண்ட காலத்திற்கு கார்டிசோலின் அளவை அதிகமாக வைத்திருக்கலாம், இதனால் நீண்ட காலத்திற்கு உடலை சேதப்படுத்தலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?

    நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்கள்:

    * அவர்களுக்கு காது கொடுத்து, அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

    * கேட்கும் வரை அறிவுரை வழங்காதீர்கள்

    * அவர்களின் உணர்ச்சிகளை நிராகரிக்காதீர்கள்

    * முடிந்தால் அவர்களுக்கு 'எனக்கு நேரம்' கொடுக்க சில பொறுப்புகளைப் பகிரவும் அல்லது எடுத்துக்கொள்ளவும்.

    * அவர்களின் மன அழுத்தத்தை தூண்டுவதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்

    * தொழில்முறை உதவியை நாடும் யோசனையை அறிமுகப்படுத்துங்கள்

    மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும். ஒரு பெண்ணாக இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களை அதில் இருந்து தப்பிக்க வைக்க விரும்பும் விஷயங்கள்:

    * உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களின் பட்டியலை எழுத முயற்சிக்கவும், அவற்றை குறைக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கவும்.

    * நாளிதழை பராமரித்து, உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

    * தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

    * சர்க்கரை உணவுகளில் இருந்து விலகி இருங்கள்

    * புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் குறைத்தல்

    * ஒரு பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்

    * தவறாமல் தியானம் செய்யுங்கள்

    * தூக்க சுகாதாரத்தை கடைபிடிக்கவும், போதுமான தூக்கம் (6 முதல் 8 மணிநேரம்) பெறுவதை உறுதிப்படுத்தவும்

    * தினசரி போதுமான சுத்தமான காற்று மற்றும் சூரிய ஒளியை பெறுங்கள்

    சில சமயங்களில், பெண்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளால் சுமையாக இருக்கலாம். அவர்களை அதிகமாகவும் அழுத்தமாகவும் ஆக்குகிறது. நீங்கள் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பது நல்லது. உங்களால் அதை செய்ய முடியாவிட்டால், தொழில்முறை உதவியை நாடுங்கள்.

    நீங்கள் ஒரு நண்பராகவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பெண்களை கவனித்துக் கொள்ளும் ஆணாகவோ இருந்தால், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிசாய்த்து, தொழில்முறை உதவியை நாட அவர்களுக்கு உதவலாம். சில நேரங்களில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது, அவசரத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பது மற்றும் அவற்றை கையாள்வதற்கான மூளைச்சலவை செய்யும் வழிகள் ஒரு சிறந்த செயலாக இருக்கும்,

    மேலும் விஷயங்கள் குழப்பமாகத் தோன்றும்போது பெண்கள் கட்டுப்பாட்டை உணர உதவும். பெண்கள் பல பணிச்சுமை மற்றும் பல பொறுப்புகளை கையாள்வதில் சிறந்தவர்கள், ஆனால் ஏன், நீங்கள் விரும்புவதை செய்ய தினமும் உங்களுக்காக நேரம் ஒதுக்குவது இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் இதற்கான நேரமும் இருக்க வேண்டும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள் முழு ஆற்றலையும் செலுத்தலாம். நீங்கள் ஒரு வளர்ச்சி மனப்பான்மையை கடைப்பிடிக்கலாம் மற்றும் வாழ்க்கை வழங்கும் அனைத்து அனுபவங்களுக்கும் உங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம்.

    • பல பெண்கள் தொழில்முனைவு பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர்.
    • சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.

    இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவு பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறைந்த முதலீட்டில் குறைந்த லாபத்தை பெற கூடிய தொழில்கள் செய்கிறார்கள். 500 முதல் 20 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பித்து 1000 முதல் 40 ஆயிரம் வரை லாபம் பெற கூடிய தொழில்கள்.

    லாபம், பணம் இவற்றை தாண்டி ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை என்பதே இவர்கள் அனைவரின் அறிவுரை. வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதேபோல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்தெடுத்துக்கொள்ளவும்.

    உங்கள் லபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.

    சிறுதொழில் வகைகள்:

    மசாலா பொடி தயாரிப்பு

    ஊறுகாய் தயாரிப்பு

    பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு

    ஜாம் தயாரிப்பு

    சிப்ஸ் தயாரிப்பு

    அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு

    மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு

    சிறு உணவகம்

    டீ கடை

    ஜூஸ் கடை

    சிற்றுண்டி விற்பனை கடை

    இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு

    விற்பனை தொழில்கள்:

    ஆடைகள் விற்பனை

    சிறு பாத்திரங்கள் விற்பனை

    அழகு சதான பொருள்கள் விற்பனை

    கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை

    வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை

    பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை

    பழம் விற்பனை

    காய்கறி விற்பனை

    பண்ணை சிறுதொழில்கள்:

    முயல் வளர்ப்பு

    கோழி மற்றும் காடை வளர்ப்பு

    தேனீ வளர்ப்பு

    ஆடு வளர்ப்பு

    இறால் வளர்ப்பு

    மேற்கண்ட பண்ணை தொழிகள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது

    இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ள அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழில்களுக்கான மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்களை தெரிந்துகொள்வது நல்லது. 3-வது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைதல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும் .

    நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் ஐந்து முக்கிய வேலைகளை ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலைகளை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம். ஐந்தாவது உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. எந்த ஒரு ஒரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்னர் அந்த தொழிலில் அதிக வருமானத்தை கொடுக்குமா? என்பதை விட விருப்பப்பட்டு அதனை செய்ய வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். சரியான திட்டமிடல் வேண்டும். திட்டமிடல் தான் நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்லும்.

    • பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
    • பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது.

    ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் குடும்பத்தை கவனித்துக்கொண்டு இன்னொரு புறம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் சமூகத்தில் முன்னேறி செல்கின்றனர். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது.

    பெண்கள் அனைத்து துறையிலுமே முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனினும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமும் இருந்து, அதற்கு வழியில்லாத பெண்களுக்கு, தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    அந்தவகையில், பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதுவும் மிக மிக குறைந்த வட்டியில். இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமான வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. பேக்கரி, கண்ணாடி தயாரிப்பு, கேண்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர், காபி பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம். வட்டியே இல்லாமல் கூட இத்திட்டத்தில் கடன் கிடைக்கும்.

    இதுமட்டுமல்லாமல் அரசிடமிருந்து 30 சதவீத மானிய உதவியும் கிடைக்கிறது. இப்படி பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும்நிலையில், பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகை அளவானது, தொழில் முனைவோர் தரக்கூடிய திட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    உத்யோகினி திட்டம்

    பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் கிராமப்புறம் மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்களை ஊக்குவித்து தொழில்முனைவோராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாகுபாடின்றி வட்டியில்லா கடன்களை வழங்குகிறது ஒவ்வொரு மாவட்டத்தின் நகராட்சி கிளைகளிலும் கடனுக்காக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மளிகை, பேக்கரி, ஊறுகாய் வணிகம் போன்ற 8 வகையான சிறு தொழில்களுக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது. இந்த கடன்களைப் பெற 25 முதல் 62 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

    அன்னபூர்ணா திட்டம்

    மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபின் முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. கடனை எளிய தவணை முறையீல் 36 மாதங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.

    முத்ரா யோஜனா திட்டம்

    பெண்களின் நிலையை மேம்படுத்த உதவும் கடன் திட்டம். பெண்களின் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி, வர்த்தகம், சேவை என மூன்று பிரிவுகளின் கீழ் ரூ. 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 36 மாதங்கள் அல்லது அதற்குமேல் தவணைக் காலத்தை நீடிக்கலாம்.

    தேனா சக்தி திட்டம்

    இது பொதுத்துறை வங்கியின் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சில்லறை வர்த்தகம், குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. கடன் தொகையாக ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிற்கும் கடன்களுக்கான விதிமுறைகள் மாறுபடும். இத்திட்டத்தில் கடன் பெறும் பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில் 0.25  சதவீதம் விலக்கு கிடைக்கும்.

    யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம்

    பெண் தொழில்முனைவோருக்கு சக்தியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி திறனை மேம்படுத்த, செயல்பாட்டு மூலதனத்திற்காக 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். புதியா தொழில் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் வரை கடன் பெற எந்த வரம்பும் இல்லை ஆனால், 2லட்சம் முதல் 25 லட்சம் வரை கடன் பெற, உங்கள் தொழிலில் எதிர்பார்க்கப்படும் ஆண்டு விற்றுமுதலில் 15 சதவீதம் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் அதற்குமேல் வாங்குவதற்கு 15 சதவீதம் லாபம் வழங்குப்பட வேண்டும்.

    ஸ்த்ரீ சக்தி திட்டம்

    இத்திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு சில சலுகைகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக உள்ளது. பிசினஸில் பெரும்பான்மை பங்கை கொண்டிருக்கும் பெண்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். மேலும், இந்த பெண்முனைவோர் அவர்கள் வாழும் மாநிலத்தில் தொழில்முனைவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணைந்திருக்க வேண்டும் இத்திட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு வட்டியில் 0.05% விலக்கு பெறலாம்

    • ஒரு வேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம்.
    • வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டுவதால் தலைவலி ஏற்படுகிறது.

    தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இந்த தலைவலி. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி வருவது அதிகம்.

    இன்றைய காலத்தில் பல காணரங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது. தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இதனை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது.

    முதலில் தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தற்போது தலைவலி எதனால் ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம். இந்த பிரச்சினை ஏற்படாமல் உங்களால் முன்கூட்டியே தடுக்க முடியும்.

    காரணங்கள்:

    கோடை காலத்தில் ஏற்படும் தலைவலி வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். இந்த வெப்பம் காரணமாக மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜன் குறைகிறது. இதனால் தலைவலி ஏற்படுகிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் தலைவலிக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

    வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக பயன்படுவதால் கூட தலைவலி ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது, காஃபின் அல்லது ஆன்ட்டி ஹிஸ்டமைன் கலந்துள்ள இந்த மருந்துகள் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.

    ஒருவேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம். நமது மூளை இரண்டு விஷயங்களை முக்கியமாக கொண்டு இயங்குகிறது. அவை குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருந்து இவை இரண்டும் நமது மூளைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மூளைக்கு கிடைக்காத பொழுது, வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டி நமக்கு தலைவலி ஏற்படுகிறது.

    புளித்த அல்லது பழைய உணவுகள் கூட தலைவலியை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீண்ட நாள் அடைத்து வைக்கப்பட்ட வைக்கப்பட்ட வினிகர், சோயா சாஸ், மற்றும் சீஸ் உணவுகள் ஆகியவற்றில் அமினோ அமிலம் உள்ளது. இது நமது உடலில் ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை தூண்டுகிறது.

    உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு மெக்னீசியம் சத்து இல்லை என்றால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

    உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். நாம் பகல் நேரங்களில் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தாமல் இருப்பது, இந்த தலைவலி ஏற்பட காரணமாகிறது. உடலில் நீர்சத்து இல்லாமல் இருந்தால் ரத்தம் கெட்டியாகி, இதன் விளைவாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளையில் தூண்டப்படும் ரசாயன செரடோனின் காரணமாக ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது.

    உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காததன் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. தினசரி வேலையின் காரணமாக ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி நீர்ச்சத்து குறையும்.

    மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மத்தியில் இந்த தலைவலி பொதுவாக ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.

    தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கணினியில் நேரத்தை செலவிடுவதால், உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். இதனால் உங்கள் தோள்கள் இறுக்கமாகிறது மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் இருக்கிறது.

    சில வாசனை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. வாசனைகள் மூக்கின் வழியாக நேரடியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய ஒரு நறுமணம் தலைவலிக்கு வழிவகுக்கிறது.

    தூக்கத்தில் உங்கள் பற்களை கடிப்பதாலும் தலைவலி ஏற்படலாம். இந்த பிரச்சினை மன அழுத்தம், மருந்து அல்லது மோசமான பல் சீரமைப்பு ஆகியவற்றால் கூட அதிகரிக்கலாம்.

    • எல்லா பருவ நிலைகளிலும் அணிந்து கொள்ள ஏற்றது காட்டன் புடவைகள்.
    • காட்டன் புடவைகளில் மாறுதல்களும் டிசைன்களும் மெருகூட்டப்பட்டு வருகிறது.

    சேலைகளில் காட்டன் புடவைகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உடுத்துவதற்கு வசதியாகவும், அதே சமயம் நேர்த்தியான கம்பீரமான தோற்றம் தருவது காட்டன் புடவைகள். எல்லா பருவ நிலைகளிலும் அணிந்து கொள்ள வசதியாக இந்த காட்டன் புடவைகள் இருக்கும்.

    முன்பெல்லாம் காட்டன் புடவை என்று சொன்னாலே அதை பராமரிப்பது மிகவும் கடினம் என்று தோன்றும். இப்பொழுது பியூர் காட்டன் மட்டுமின்றி காட்டனுடன் வேறு சில நூல்களும் கலந்து பராமரிப்பதற்கு எளிதாகவும் பார்க்கும் பொழுது வசீகரிக்க வைக்கும் விதத்திலும் பல்வேறு புடவைகள் வரத்தொடங்கி விட்டன. இருப்பினும் காட்டனுக்கு என்று பெயர்பெற்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளன.

    கோவை கோரா காட்டன் புடவைகள்:

    இந்த வகையான புடவைகள் பருத்தியும் பட்டும் கலந்த கலவையாகும். நல்ல தரமான பருத்தி நூலுடன் பாரம்பரியமிக்க பட்டு நூலும் கலந்து இந்த கோரா காட்டன் புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த கோர காட்டன் புடவைகள் வண்ணமயமான வடிவமைப்புடன் தயாராகிறது. எளிமையான அதேசமயம் எடுப்பான தோற்றம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு கோவை கோரா காட்டன் புடவைகளை தேர்வு செய்யலாம்.

    காதி காட்டன் புடவைகள்:

    கண்களை உறுத்தும் வகையில் இல்லாமல் எளிமையான கம்பீரமான தோற்றம் பெற்றிட இந்த காதி காட்டன் புடவைகளை தேர்வு செய்திடுங்கள். காதி காட்டன் என்பது கைத்தறி சேலைகள் ஆகும். இந்த காட்டனில் ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டன் புடவை பிரியர்கள் அலமாரியில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் காதி காட்டன் புடவை.

    கோட்டா தோரியா புடவைகள்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா என்னும் பகுதியில் இருந்து கிடைக்கக்கூடிய புடவைகள் இந்த கோட்டா தோரியா புடவைகள். இதில் புடவை முழுவதும் சதுரங்களால் ஆன வடிவமைப்பை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் வசீகரமானதாகவும் இருக்கக்கூடிய புடவைகள் இவை.

    செட்டிநாடு காட்டன் புடவைகள்:

    வழக்கமான காட்டன் புடவைகளை விட செட்டிநாடு காட்டன் புடவை சற்று அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் பெரிய அளவிலான வேலைப்பாடுகள் இல்லாமல் எளிமையான கட்டங்கள் மற்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் அதிகம் இருக்கும். பெரிய பார்டர்களை கொண்டு பல்லுவிலும் இதே கட்டம் மற்றும் கோடுகளால் டிசைன் செய்யப்பட்டிருக்கும். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நெய்து வரப்படும் இந்த செட்டிநாடு காட்டன் புடவை பலரின் விருப்புத்தேர்வாகவும்ம் இருக்கிறது.

    இவை மட்டுமின்றி இன்னும் பல்வேறு வகையான புகழ்பெற்ற காட்டன் புடவைகள் இருக்கின்றன. காட்டன் புடவை என்றாலே இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் இவர்களுக்கானது என்ற நிலை மாறி இன்று கல்லூரி செல்லும் பெண்கள் கூட அதிகம் விரும்பும் வகையில் காட்டன் புடவைகளில் பல்வேறு மாறுதல்களும் டிசைன்களும் மெருகூட்டப்பட்டு அனைவரின் விருப்பத்தேர்வாக மாறி வருகிறது.

    • உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது.
    • உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது

    உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். நம் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி பெற கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல தாதுக்கள் தேவைப்படுகின்றன. எனவே சமச்சீரான ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றில் இருந்து தப்பிக்க உதவுகிறது

    பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

    * உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    * ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.

    * ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

    * ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.

    * ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

    * ஜிங்க்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.

    * ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

    * ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்வதற்கு உதவுகிறது.

    • பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு.
    • வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம். வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்ட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

    அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும்.

    எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது. உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும்.

    இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள் மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது நல்லது.

    பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.

    செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வைபடும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.

    குளிப்பது, பாத்திரம் துலக்குவது. வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.

    வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.

    ×