search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாளவிகா மேனன்"

    • மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது.
    • ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.

    சென்னை:

    மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா நிழலா', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மாளவிகா மேனன் சினிமா வாழ்க்கை பற்றிப்பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    'நான் முதன்முதலில் நடித்தது 'நித்ரா' என்ற மலையாள படத்தில்தான். அப்போது எனக்கு 14 வயது. சின்ன பெண்ணாக இருப்பதால் என்னை இயக்குனர் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்.

    பின்னர், '916' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். அதில் நிறைய சவாலான காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. சிரமம்தான் இருந்ததே தவிர, பெரியளவில் கேலி பேச்சுகள் வரவில்லை. மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் வராது. ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.

    இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், அது பேசப்படும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • பேட்டை படத்தில் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார்.
    • அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.

    இதன் மூலம் பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

    அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன்.
    • கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.

    'விழா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மேனன். தொடர்ந்து பேய் மாமா, அருவா சண்ட, நிஜமா நிழலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    "பேய் மாமா படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தேன். தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன். வித்தியா சமான கதைக்காக காத்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.

    தற்போது நான் நடித்து வரும் திலிப் டி 148 1970 களில் நடந்த உண்மை சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நான் நடித்துள்ள 13-ம் ராத்திரி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு என்று அதிக ஆசை எனக்கு உண்டு. 13-ம் ராத்திரி படம் நிறைய கதைகளை ஒன்றாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சமாளித்து வெளியில் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

    நான் தைரியமான பெண். அதனால்தான் குருக்கன் படத்தில் ஜீப் ஓட்டுகிற காட்சிகளில் நான் தைரியமாக ஜீப் ஓட்டி சென்றேன். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் படத்துக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்க வேண்டும். சினிமாவில் நிறைய மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன். என் கனவே சிறிய வயதில் இருந்து சினிமாவில் நடிப்பதுதான். எனது குடும்பத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலையை சினிமாதான் சரி செய்கிறது" என்று கூறினார்.

    ×