என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லேப்-டாப்"
- துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
- சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை சாலையில் கலெக்டர் அலு வலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விதை சான்று மட்டும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
பின்னர் தனி நபரின் அலுவலகத்தில் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9000 மர்ம நபர்கள் திருடி உள்ளனர். அருகில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்தில் திருட முயற்சித்துள்ளனர்.
ஆனால் பணம் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
- விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார்
- பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்
திருவட்டார் :
குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியில் சகாயாமாதா நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் பயன்பாட்டிற்காக விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் தெய்வமலர்வழி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜான் போஸ்கே முன்னிலை வகித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், கவுன்சிலர்கள் சுஜா, ஜாஸ்மின், அமலா புஷ்பம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்