என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாண்டிச்சேரி"

    • இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    மனக்குறைகளை தீர்க்கும் இரும்பை மாகாளீஸ்வரர்

    புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் கோவில்.

    புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 சிவ திருத்தலங்களில் 32வது திருத்தலமாக இரும்பை மாகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலமாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது.

    1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு அவர் பூஜித்து அருள்பெற்ற ஸ்தலமாகவும் இது உள்ளது.

    இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய கோவில்களையும் ஸ்தாபித்துள்ளார்.

    திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க கோவிலாகவும் இது அமைந்துள்ளது.

    இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    கோவிலை சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள்.

    கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்களுடன் இப்போதும் கருவறை சிலை உள்ளது.

    • நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
    • கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார்.

    ஓவியர் ஏழுமலையின் மண்ணின் மனம் என்ற தலைப்பிலான நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.

    கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார். அப்போது தான் வரைந்த ஓவியங்களை ஓவியர்கள், பார்வையாளர்களிடம் காண்பித்து அந்த ஓவியம் வரையப்பட்ட சூழலை விளக்கி கூறியதாவது:-

    1962-ல் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் படம் வரைந்த போது வெளியேறுமாரு மறைமுகமாக கூறினார்கள். அதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் சென்று படங்கள் வரைந்து வந்து அதை காட்டினேன். உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஓவியம் வரைய அனுமதித்தனர்.

    1962-ல் மதுரையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே சிட்டிங்கில் மதுரை காமாட்சி கோவிலை வரைந்தேன். யாராலும் இதை 20 வயதில் வரைய முடியாது.

    1986-ல் சிந்து பைரவி படம் ஓடி 200 நாள் வெற்றி விழா மதுரையில் நடந்தது.அப்போது என்னை பார்க்க ஒருவர் வந்தார். அவர் 1962-ல் திண்டுக்கல்லில் என்னுடன் சாப்பிட்டதை குறிப்பிட்டார். அவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. கன்னியாகுமரியில் ரூ.2-க்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி பிரம்மாண்டமாக வந்த அலைகளை பார்த்து 400 அலைகளை மனதில் வைத்து வெள்ளை பெயிண்டை பயன்படுத்தாமல் ஓவியம் வரைந்தேன்.இதுவரை 192 படங்களில் நடித்துள்ளேன். இந்தியா முழுவதும் நான் சுற்றி வரைந்த ஓவியங்களுக்கான செலவு ரூ.7,500 தான். இன்னொரு பிறவி எடுத்தால் ஓவியமாக பிறக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அல்ல. இவ்வாறு சிவக்குமார் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×