என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் அஜித்"
- பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
- அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் தாமதம் ஆகி வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர், 'விடாமுயற்சி' கண்டிப்பாக உருவாகும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித், தனது மனைவி மற்றும் பள்ளிக் குழந்தைகளோடு ஜாலியாக சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன. அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.
- அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மிக ஆர்வம் உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்'
- அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.'தல' என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.'விடாமுயற்சி' நட்பால் நடிகர் ஆரவும் இந்த சுற்றுப் பயணத்தில் அவருடன் இணைந்து உள்ளார்.
ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்
நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
- அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.
வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி.
- படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதன்பிறகு அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.
இந்த நிலையில் விடாமுடற்சி படத்தின் ஒரே ஒரு பாடல் ஷூட் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்ஷன் வேலைகள் தொடரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சியை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார் அஜித் குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சில காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்டது.
- இதில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் 24H துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கார் ரேஸில் வெற்றி பெற உழைத்த எனது அணிக்கு நன்றி. ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
- வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
- கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.
சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் கூறியிருப்பதாவது:-
சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது.
வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.
வாழ்க்கை மிக மிக குறுகியது அழகாக வாழ பாருங்கள். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.