search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய பெண்கள் 5 பேர் ஹாக்கி"

    • முதல் பாதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    • 2வது பாதியில் மலேசியா அணி 2 கோல்களும், இந்திய அணி 4 கோல்களும் அடித்தது.

    2024ம் ஆண்டு முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது.

    இதில் பங்கேற்ற இந்திய அணி வங்காளதேத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதேபோல், ஓமன் அணிகளுக்கு எதிராக வெற்றியும், மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியும் சந்தித்தது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 4வது ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதியது. இதில், முதல் பாதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

    பின்னர் 2வது பாதியில் மலேசியா அணி 2 கோல்களும், இந்திய அணி 4 கோல்களும் அடித்தது.

    இதனால், இந்த போட்டியின் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.

    • அரை இறுதியில் இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

    சலாலா:

    அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல பெண்கள் போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த அரை இறுதியில் இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இறுதி போட்டியிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். முடிவில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இந்திய அணி தரப்பில் குஜூர் மரியானா மற்றும் ஜோதி 2 கோல்களும், டோப்போ திபி மோனிகா, கவுர் நவ்ஜோத் மற்றும் சவுத்ரி மஹிமா தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு ஹாக்கி இந்தியா ரொக்க பரிசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ. 2 லட்சமும் மற்ற பணியாளர்களுக்கு ரூ. 1 லட்சமும் ரொக்க பரிசு அறிவித்துள்ளது.

    • இந்திய கேப்டன் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
    • அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.

    சலாலா:

    ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசிய அணியை எதிர் கொண்டது. லீக் சுற்றை போலவே இதிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வீருநடை போடுகிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒமன் நாட்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்து அணியுடன் இன்று இரவு பலபரீட்சை நடத்த உள்ளது. முன்னதாக இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்றில் இந்திய அணி தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.




    ×