என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர ஆணையர்"
- சென்னையில் இன்று பிற்பகல் முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- பல பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதலே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த இருக்கிறது.