என் மலர்
நீங்கள் தேடியது "கே பாலையா"
- ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் பாலையா என்கிற நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் கே.பாலையா இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.
- இதில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் கே.பாலையா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் (BR Talkies Corporation) சார்பில் பி.பாஸ்கரன் மற்றும் பி.ராஜபாண்டியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு 'புரொடக்ஷன் 2' என்று அழைக்கப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.