search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திவ்யா ஸ்பந்தனா"

    • தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
    • வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.

    அண்மையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே இவருக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் நடத்தி வைத்துவிட்டன. எத்தனை முறை என்பதை நானே மறந்துவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், நானே உங்களிடம் தெரிவிப்பேன். தயவுசெய்து, அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது.
    • தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார்

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

    மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா.
    • இவர் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.


    ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா

    தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே.டி. லட்சுமி காந்தன் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திவ்யா ஸ்பந்தனா நன்றாக இருப்பதாகவும் அவரை பற்றி பரவிய செய்திகள் 100 சதவீதம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

    நடிகை திவ்யா ஸ்பந்தனா தற்போது ஜெனிவாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





    • நடிகை திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
    • பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.


    ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா

    தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், நடிகை திவ்யா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என்றும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    ×