search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்தல மாத்தி"

    • இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.
    • மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

    பிரபல நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.

    அதன்படி ஏற்கனவே அதாகப்பட்டது மகாஜனங்களை , மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ள உமாபதி ராமையா 'ராஜகிளி' என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது உமாபதி ராமையா, 'பித்தல மாத்தி' எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் உமாபதி ராமையாவுடன் தம்பி ராமையா, பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படம் காமெடி கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ளது. மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி உள்ளது.

    இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 14 உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு தற்பொழுது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பசத்தில் நடித்த பால சரவணன் படத்தில் நடித்த அவனுபவத்தை பற்றி பேசி ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'.
    • இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.

    இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.

    படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.

    ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் இதற்கு முன் நான்கு படங்களை தயாரித்து இருக்கிறது. இவர்களின் இணை தயாரிப்பில் ஜோரா கைய தட்டுங்க என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பித்தல மாத்தி திரைப்படம் வெளியான பிறகு ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஜி. சரவணன் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'.
    • இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.

    இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.


    படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம். தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தை செப்டம்பர் 22 -ஆம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.

    ×