search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி போலீஸ்"

    • 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர்.
    • கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 414 பேருக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவு வெளியானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, இடமாற்றம் உத்தரவு வெளியிட்ட தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் அறிவித்தார்.

    இடமாற்றம் உத்தரவு மற்றும் நிறுத்தி வைப்பு உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போலீஸ் டி.ஜி.பி.யின் அனுமதி இன்றி இடமாற்றம் உத்தரவு வெளியானது எனவும், உள்துறை அமைச்சர் அனுமதி பெறாமல் வெளியான பட்டியல் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக போலீசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதுமட்டும் இன்றி, மணவெளி தொகுதியைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றப்பத்திரிக்கையில் ஒருவர் பெயரை நீக்கியதற்காக போலீஸ் சூப்பிரண்டின் கோபத்திற்கு ஆளாகி கட்டாய விடுப்பில் சென்றார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் வெளியானது.

    பெண் சப்-இன்ஸ்பெக்டரை மாற்ற கூடாது என கடந்த வாரம் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து உத்தரவு சென்றது. அதை மீறி இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த உத்தரவு நிறுத்தப்பட்டதாகவும் போலீசார் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பிற்கு இடையே இறந்து போன போலீசார், போலீசில் இருந்து வெளியேறி மாற்று அரசு பணிக்கு சென்றவர்களுக்கும் இடமாற்றம் உத்தரவு வெளியானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    சமீபத்தில் வில்லியனுாரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் இடம்பெற்று இருந்தது.

    அதுபோல் 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர். அவர்களது பெயரும் இடமாற்ற உத்தரவில் இருந்தது. கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால் இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

    • மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.
    • நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்களில் பலர் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக புதுவை பழைய துறைமுக பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தின் தூண்களில் அமர்ந்து மது குடிப்பது, கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளில் வீசி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் மதுபாட்டில்களின் கண்ணாடி சிதறல்கள் கடற்கரைக்கு வருபவர்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. மேலும் கும்பலாக வரும் இளைஞர்கள் குடித்து விட்டு ரகளையிலும் ஈடுபடுகின்றனர். இதனால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதுக்கு வந்த பெண்களோடு வரும் பெற்றோர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.

    இந்த நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்களையும் விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

    மேலும் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
    • பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.

    இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.

    அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.

    மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.

    வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.

    இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது. 

    • டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
    • திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தால் புதுவை முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த படுகொலை தொடர் பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவ்வழக்கில் தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த தடயங்கள், குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு பரிசோதனை, டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். எனவெ சிறுமி பாலியல் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு வினரும், கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் லட்சுமி தலைமையில் முத் தியால்பேட்டை போலீ சாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் சிறுமி கொலை வழக்கு குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து முடித்துள்ளனர்.

    இவ்வழக்கு விசாரணையை டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சுமார், 600 பக்க விசாரணை அறிக்கை டி.ஜி.பி. மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர்கள் ஆலோசனை பெற்றவுடன் திருத்தங்கள் ஏதேனும் வந்தால், அதன்படி திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

    • புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது.

    இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் ஓட்டல்கள் மற்றும் சிறிய பெட்டி கடைகள் கூட திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான வெளியூர் பெண்கள் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவர். நேற்று பந்த் போராட்டம் காரணமாக அந்த உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் உணவின்றி தவித்தனர்.

    இதை அறிந்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இணைந்து உணவு தயாரித்து ஆஸ்பத்திரி எதிரில் உணவுக்காக தவித்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    மனித நேயமிக்க போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

    அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிக்னல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியது.

    அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில் சாலைகளில் செல்ல வேண்டிய வேககட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட (45கி.மீ.) அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை, திண்டிவனம் சாலையில் ஜிப்மர் முதல் இந்திராகாந்தி சிலைவரை, கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நவீன கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையும் இணைந்து அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.

    எனவே இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்டமாக மேலும் பல முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ×