என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டி"

    • இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.
    • பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்ச பாண்டவர்களைக் காத்தார்.

    ஸ்ரீகிருஷ்ணர் இப்பூவுலகில் தனது அவதார நோக்கத்துக்காகப் பல அற்புதங்களை புரிந்தார்.

    தேரோட்டிய சாரதி :

    பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்ச பாண்டவர்களைக் காத்தார்.

    தனது விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்குக் காட்டி அருளினார்.

    பகவத் கீதை :

    பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.

    இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    பகவத் கீதையின் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது.

    பகவத் கீதையில் கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று விதமான யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

    இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    • அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.
    • கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.

    1. கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    2. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

    3. தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

    4. கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

    5. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

    அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

    • பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார்.
    • “உங்களைக் கட்டிப் போட்டால் யுத்தம் வராமல் தடுக்க முடியும்” என்கிறான்.

    பாண்டவர்களுள் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார் என்று சொல்ல முடியாது.

    ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.

    ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.

    ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன்.

    பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை.

    குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார்.

    அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார்.

    அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா-சமாதானமா என்று கேட்கிறார்.

    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர்.

    ஆனால் சகாதேவன் மட்டும் "எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது.

    அதைச் செய்யுங்கள்" என்கிறான்.

    சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்,

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த பரமாத்மா "பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்" என்று கேட்கிறார்.

    "உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்" என்கிறான் சகாதேவன்.

    "எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!" என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார்.

    ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டுகிறான்.

    அதற்கு மகிழ்ந்து கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிகிறார் கண்ணன்.

    "பசையற்ற உடல்வற்ற" என்ற இந்தப் பாடலில் பாண்டவர் மீது குற்றமற்ற, முடிவில்லாமல் வளர்ந்த பற்று வைத்திருந்த கண்ணன்,

    சகாதேவனுக்கு அளவற்ற தனது வடிவங்களைக் காட்டினார்.

    ×