என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாமகம்"

    • அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.
    • நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில்தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது.

    இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார்.

    அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    • அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.
    • அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

    இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.

    இறைவன் பெயர் அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

    பிரளயத்தின் பொழுது சிவபெருமான் வேட உருவம் தாங்கி அமுத கலசத்தை உடைத்த பொழுது அந்தக் கும்பத்திலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியது.

    அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

    இதனால் இத்தலத்திற்கு நாளிக்கேசர் என்று பெயர் சூட்டப்பட்டது (நாளி என்றால் சமஸ்கிருதத்தில் தென்னை மரத்தைக் குறிக்கும்).

    இத்தலத்தில் இறைவன் முதலில் கிழக்கு நோக்கித்தான் இருந்தார்.

    மகாமகக்குளத்தில் மகாமக தினத்தன்று நீராட நவ புண்ணிய நதிக் கன்னியர்கள் வந்த பொழுது,

    அவர்களுக்குத் தரிசனம் தர வேண்டி மேற்குத் திசையில் காட்சி கொடுத்தருளினார்.

    இதனால்தான் இங்குள்ள இறைவன் பின்னர் அபிமுகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    எந்த புண்ணிய தலத்திற்கும் சென்றும் தீராத குஷ்ட நோயை "சுமதி" என்ற பெண்ணுக்கு இங்குள்ள இறைவன் அந்த நோயைத் தீர்த்தார் என்பதால்

    அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.

    • மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
    • அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.

    அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.

    தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.

    ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.

    இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.

    • பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
    • கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்

    1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்

    2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்

    3. யம தீர்த்தம் -யம பயமில்லை

    4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்

    5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்

    6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்

    7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்

    8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்

    9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்

    10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்

    11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்

    12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்

    13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்

    14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்

    15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்

    16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்

    17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்

    18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்

    19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.

    • அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு.
    • இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது

    கும்பகோணம் தலம் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் திருவருள் செயலால் தோன்றி விளங்குகிற தலமாகும்.

    காவிரி ஓடுவதால், நீர்வளம் நிலவளம் மிக்கது.

    பொன் கொழிக்கும் பூமி.

    அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு. இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்நகரத்தின் பெருமைகளைப் பற்றி ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது என்று சொல்வார்கள்.

    பரமசிவனும், மகாவிஷ்ணுவும் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் ஸ்தலம்.

    மாந்தாதர், மதங்கமுனி, துமகேது, சூரியன் இவர்களால் கடும் தவம் செய்து, பரபிரும்மத்தினை அடைந்து, சாயுஜ்யம் பெற்ற இடமும் இது ஆகும்.

    • காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
    • சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.

    * கன்னியா தீர்த்தக்கரையின் வடபக்கத்தில் வீற்றிருக்கும் நவகன்னியர்களோடு கூடிய காசிவிசுவநாதரை காண சகல அதிஷ்டங்கள் கைகூடும்.

    * கீழ்கரையில் மேற்கு திசை நோக்கி இருக்கும் அபிமுக்தேசுவரரை தரிசிப்பவருக்கு மறுஜென்மமில்லை.

    * மேல்கரையில் இருக்கும் கவுதமேசுவரனார் குபேர சம்பத்தை பக்தர்களுக்கு அளிக்கிறார்.

    * வில்வ வனத்தில் நாகேசுவரர் மகாமக குளத்தின் வடமேற்கு மூலையில் இருக்கிறார், சிவஸாயுஜ்யம் அவரை தரிசிப்போருக்கு ஏற்படும்.

    * சோமேசர் நாகேசருக்கு வடக்கு மூலையில் இருக்கிறார். குருவும் சந்திரனும் வழிபட்டு பேறு பெற்றர்கள்.

    * சோமேசருக்கு வடக்கில் ஹேமமுனியின் தவம் சித்தியடைவத்தின் பொருட்டும், அசுரர்களை சம்ஹாரம் செய்யவும் ஸ்ரீ தேவியோடும் பூதேவியோடும் சாரங்கபாணியாய் இருக்கிறார்.

    அவரை பார்த்த மாத்திரத்தில் பாவம் பறந்தோடுகிறது. விஷ்ணு சாயுஜ்யம் ஏற்படுகிறது. மகர சங்கராந்திதினத்தில் பொற்றாமரை ஸ்நானம் சிறப்பாகும்.

    * ஆராவமுதனுக்கு நேர்மேற்கில் ஆதிகும்பேசுவரர் இருக்கிறார் கடும்தவம் செய்திருந்தாலொழிய அவர் தரிசனம் ஏற்படாது வெள்ளிக்கிழமையில் மங்களநாயகியின் தரிசனம் விசேஷ பலன் தரும்.

    * கும்பநாதருக்கு தென்மேற்கில் தூமகேது முனிக்கு தரிசனமளித்த ஆதிகம்பட்ட விசுவநாதர் வீற்றிருக்கிறார்.

    * கும்பேசுவாருக்கு வடக்கில் காவிரியின் தென்கரையில் பூவாரக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

    * காசியபருக்கு காட்சி கொடுத்த இலட்சுமி நாராயணர் காவிரி தீர்த்தில் இருக்கிறார்.

    * காவிரிக்கு வடபக்கத்தில் ( மேலக் காவேரி ) மதங்கருக்கருளிய வரதராஜன் வீற்றிருக்கிறார்.

    * காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.

    * சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.

    புராண காலத்திற்கு பின்தோன்றி சிறப்போடு விளங்கும் கோவில்கள்

    1. காளாத்தி நாதன் (சிவன்கோவில்) 2. ராமஸ்வாமி (ராமர் கோவில்) 3. வரதராஜ பெருமாள் கோவில் 4. சரநாராயண பெருமாள் கோவில் (தசாவதார பெருமாள்) 5. வேதநாராயணன் (பிரம்மன் கோவில்)

    • நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)
    • பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)

    1. காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி)

    2. கதா தீர்த்தம் (ஓடத்துரை)

    3. சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்குதங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின் எலும்பு இவ்விடத்தில் தாமரைப்பூவாக மாறிவிட்டது. ஆகையால் காசியை நோக்கிகொண்டு போகப்பட்ட அஸ்தி இங்குமீண்டும் கொண்டுவரப்பட்டது)

    4. ஈசான்ய தீர்த்தம்

    5. பிரும்ம தீர்த்தம் (அரசலாறு பிரும்மன் கோவில் துறை) தடாகங்கள்

    6. கன்னியா தீர்த்தம் (மகாமக தீர்த்தம்)

    7. ஹேமபுஷ்கரிணீ (பொற்றாமரை)

    8. கௌதம தீர்த்தம்

    9. இந்திர தீர்த்தம்

    10. வியாச தீர்த்தம்

    11.ஸோம தீர்த்தம்

    12. வராஹ தீர்த்தம்

    13. வருண தீர்த்தம்

    14. நாக தீர்த்தம் (நாகேஸ்வரன் கோவில் சிங்ககிணறு)

    15. பாதாள கங்கை (சோமனாதன் கோவில் கிணறு)

    • மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
    • நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

    நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மண்டபத்திலும் ஒருசிறு கோவிலும் கட்டப்பட்டு சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது.

    அந்த பதினாறு சிவலிங்கங்களின் பெயர்களாவன:

    1.பிரம்மதீர்த்தேஸ்வரர்

    2.முகுந்தேஸ்வரர்

    3.தளேஸ்வரர்

    4.விருஷபேஸ்வரர்

    5.பரணேஸ்வரர்

    6.கோணேஸ்வரர்

    7.பக்திஹேஸ்வரர்

    8.பைரவேஸ்வரர்

    9.அகத்தீஸ்வரர்

    10.வியாசேஸ்வரர்

    11.உமை பாகேஸ்வரர்

    12.நைருதீஸ்வரர்

    13.பிர்மேஸ்வரர்

    14.கங்காரேஸ்வரர்

    15.முக்த தீர்த்தேஸ்வரர்

    16.சேத்திர பாலேஸ்வரர்.

    • அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.
    • இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.

    மகாமக குளம் என்னும் கன்னியதீர்த்தத்தில் நீராடுபவர்களுடைய பாவக் கூட்டங்கள் சூரியனைக்கண்ட பனிபோலும் மறைந்து போகும்.

    அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.

    இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.

    வேறு இடங்களில் செய்யும் பாவம் புண்யசேத்திரத்திலும், புண்ய சேத்திரத்தில் செய்யும் பாவம் காசியிலும், காசியில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும்,

    கும்பகோணத்தில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும் நாசத்தை அடைகின்றன என்பார்கள்.

    அனைத்து விதமான யாக பலன்களையும் கொடுக்கும் தீர்த்தம் இதுவே.

    இக்குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் மகாமேருவை நூறுமுறை சுற்றி வந்த பலனை தரும் என்பது புராணமாகும்.

    நீண்ட நாட்களாக வயதக்கு வராத பெண்கள் மகாமகபெண்களுக்கு பூஜைபடைத்தால் புஷ்பவதிகளாகி கணவர்களுடைய பிரியத்தை அடைகிறார்கள்.

    • மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.
    • இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான்

    இத்தீர்த்தத்தில் நீராடுகிறவன் தனது ஏழுகுலங்களை பரிசுத்தமாக்கிக் கொள்கின்றான். அவைகளாவன:

    1.தன்குலம்,

    2.தன்பெண்ணைக்கொண்டவன் குலம்

    3.தாயின் குலம்

    4.சிறியதாயின் குலம்

    5.உடன்பிறந்தான் குலம்,

    6.தந்தையோடு பிறந்தவன் குலம்

    7.தன்மாமன் குலம்

    மகாமத் தீர்த்தம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் நினைத்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்கது.

    குழந்தை பேறு இல்லாதவர்கள் மகாமக குளக்கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒன்பது கன்னியர்களுக்கு அபிஷேகம்,

    நிவேதனம், சந்தனம், தாம்பூலம், உற்சவம் முதலானவைகளைச் செய்தபின், ஒன்பது சுமங்கலிகளுக்கு எண்ணெய், சந்தனம், குங்குமம்,புஷ்பம் கொடுத்து நல்ல விருந்தளிக்கவேண்டும்.

    கோவிலுக்கு சென்று நூறு தீபம் வைக்கவேண்டும்.

    இவ்வாறு நான்கு வெள்ளிக்கிழமை, கார்த்திகை சோமவாரம்,நவராத்திரி, தனுர்மாதம், இச்சமயங்களில் ஆராதித்தால் குழந்தை பேறு கிடைக்கும்.

    • அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.
    • இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.

    பஞ்சக்குரோச ஸ்தலங்கள்:

    1. திருவிடைமருதூர்

    2. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்

    3. தாராசுரம்

    4. சுவாமி மலை

    5. கருப்பூர் அஷ்டாதசஸ்தானம் பின்வருமாறு:

    1. திருவிடைமருதூர்

    2. திருபுவனம்

    3. அம்மாசத்திரம்

    4. திருநாகேசுவரம், உப்பிலியப்பன் கோவில்

    5. செவ்வியவரம்பை, அய்யாவாடி

    6. சிவபுரம்

    7. சாக்கோட்டை

    8. மருதா நல்லூர்

    9.பட்டீசுவரம்

    10. திருசத்திமுற்றம்

    11. தாராசுரம்

    12. திருவலம்சுழி

    13. சுவாமிமலை

    14.இன்னம்பூர்

    15. திருப்புரம்பியம்

    16. கொட்டையூர்

    17. கருப்பூர்

    18. வாணாதுரை.

    அமுதத்தால் நனைக்கப்பட்ட பூமிக்கு பஞ்சக்குரோசம், அஷ்டாதச ஸ்தானம் என்று பெயர்.

    இந்தயாத்திரைக்கு சமமான யாத்திரை இப்பூவுலதில் எங்கும் இல்லை.

    யாத்திரையால் யமகிங்கரர்களுடைய பாதை நீங்குகிறது. விருப்பங்கள் நிறைவேறும். பாவங்கள் போகின்றன.

    ஒரே தினத்தில் அஷ்டாதசஸ்தானங்களையும் தரிசிப்போர் பூமிபிரதட்சணம் பண்ணின பலனையும் சிவலோகம் விஷ்ணுலோகம் இவைகளை அடைவார் என்பது ஐதீகம்.

    • திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.
    • அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்றுசேரும் தினத்தை பிரதட்சண அமாவாசை என்று சொல்வார்கள்.

    அன்றைய தினம் காலையில் வேப்ப மரத்துடன் சேர்ந்திருக்கும் அரச மரத்தை 108 தடவை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    அன்று காலை குளித்து விட்டு மரத்தினருகில் சென்று அமாஸோமவார புண்ய காலே அசுவத்த ப்ரதட்சிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு பக்தியுடன் 108 அல்லது 54 அல்லது 21 தடவையாவது பிரதட்சணம் செய்யலாம்.

    அரச-வேம்பு மரத்தை பிரதட்சணம் செய்வதால் பாபங்கள் விலகும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும், ஏழரைச் சனியின் துன்பங்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

    தை மாதம் அமாவாசையில் திங்கட்கிழமையும் சூரிய உதய காலத்தில் திருவோண நட்சத்திரமும் வ்யதீபாத யோகமும் ஒன்றாகச் சேர்ந்தால் அன்று மஹோதய புண்ணிய காலம் எனப்பெயர்.

    எப்போதாவதுதான் நிகழும், இந்த நாளில் புண்ணிய நதியில் நீராடல், மந்திர ஜபம், பூஜைகள், ஹோமங்கள் மற்றும் தானங்கள் செய்வது அனைத்து தெய்வங்களையும் மகிழ்விக்கும்.

    அதிக அளவு புண்ணியங்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். 

    ×