search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை அழகு"

    • குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.
    • சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

    மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    குங்குமப்பூவை பால் (அ) தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.

    குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.

    கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர மாற்றம் தெரியும். தேங்காய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் குறையும்.

    குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

    குங்குமப்பூ சிலருக்கு சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

    • அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
    • இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

    அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

    இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.

    கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

    செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.

    இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.

    அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.

    ×