என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் சுகுமார்"

    • நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
    • வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.

    அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

    அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.

    இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது.
    • படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.

    ஜெகநாதன் தயாரிப்பில் முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் "டப்பாங்குத்து'. முழுக்க முழுக்க நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சங்கர பாண்டி மற்றும் தீப்தி துர்கா, காதல் சுகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் கதிரேசன், காதல் சுகுமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் காதல் சுகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நான் கோமாளி கதாபாத்திரத்தில்நடித்துள்ளேன். படத்தில் 15 நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது கலைஞர்கள் தான். கடைசியாக கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் திரை துறைக்கு தான்.

    இதனால் சினிமா துறையை சேர்ந்த பல கலைஞர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினர். நானே வீட்டில் ரேசன் அரிசியை சமைத்து சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்தேன். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஜெகநாதன் இந்த படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார். அது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. சிறு பட்ஜெட் படங்கள் தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. எனவே சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில் விஷால் பேசியபோது ரூ. 3 கோடி ரூ.4 கோடி வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். அப்படி எடுக்கும் படங்கள் வெளியே வருவதில்லை என பேசினார். திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. அதனால் திமிராக விஷால் பேசியுள்ளார்.

    விஷால் பேச்சைக் கேட்டு படம் எடுப்பதற்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேர் பயந்து போய் எனக்கு தெரிந்து படம் எடுக்காமல் திரும்பி சென்று விட்டனர்.

    எனவே படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×