search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்டலிங்க தலங்கள்"

    • கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.
    • ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.

    இந்திரலிங்கம்:

    கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.

    கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது.

    கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன்.

    இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அக்னி லிங்கம்:

    இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது.

    தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன்.

    இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும்.

    எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.

    எமலிங்கம்:

    கிரிவலப் பாதையில் 3வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது.

    தெற்கு திசையின் அதிபதி செவ்வாய்.

    இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

    நிருதி லிங்கம்:

    மலை சுற்றும் பாதையில் 4வது லிங்கமாகும்.

    நிருதி லிங்கத்தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும்.

    இத்திசைக்கு அதிபதி ராகு.

    இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.

    வருண லிங்கம்:

    ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது.

    மேற்கு திசையின் அதிபதி சனி.

    இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

    வாயு லிங்கம்:

    இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும்.

    காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது.

    இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, மன அமைதி, கண் திருஷ்டி நீங்குதல், பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.

    குபேர லிங்கம்:

    7வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு.

    இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும்.

    மனம் அமைதி அடையும்.

    ஈசான்ய லிங்கம்:

    கிரிவலப் பாதையில் கடைசி லிங்கம் இது.

    ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.

    எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடமாகும்.

    இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன்.

    இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.

    இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.

    ×