என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவன்புத்தூர்"

    • பேரூர் பழமையாதலின் புதிய ஊர் பேரூருக்கு கிழக்கிலே தோன்றலானது.
    • தமிழ்நாடு முகம் என்றால், நெற்றியில் திலகம் என விளங்குவது கோவை மாநகரம்.

    ஆறு இல்லாத ஊருக்கு அழகு இல்லை என்பதற்கு இணங்க, கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்ற ஒளவை சொல்லின்படி,

    தமிழகம் கோவில்கள் நிறைந்த மாநிலமாக திகழ்கின்றது.

    பாரத நாட்டின் முகம் என விளங்குவது தமிழ்நாடு.

    தமிழ்நாடு முகம் என்றால், நெற்றியில் திலகம் என விளங்குவது கோவை மாநகரம்.

    தொழில் வளத்தாலும், வாணிப வளத்தாலும், வேளாண்மை வளத்தாலும், மக்கள் முயற்சியினாலும் முன்னணியில் விளங்கும் பெருமை உடையது கோவை மாநகரம்.

    கோவன்புத்தூராகிய கோயம்புத்தூர், கோயமுத்தூர், கோவை என வழங்க பெறுகிறது.

    600 ஆண்டுகளுக்கு முன் திருப்பேரூர் வந்த அருணகிரிநாத சுவாமிகள் கோட்டை ஈசுவரன் கோவில் முருகபெருமானை பாடியுள்ளார்.

     பேரூர் பழமையாதலின் புதிய ஊர் பேரூருக்கு கிழக்கிலே தோன்றலானது.

    இவ்வாறு கிழக்கே தோன்றிய இந்த புத்தூரை கோவன் என்ற இருளர் தலைவன், "காடு திருத்தி நாடு" செய்தபோது

    உண்டான காரணத்தால், கோவன் புத்தூர் என பெயர் பெற்றதாகவும் பின்னர் நாளடைவில் இதுவே

    கோயமுத்தூர் எனவும் கோயம்புத்தூர் எனவும் மருவிற்று என்பர்.

    ×