என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூந்தல் பராமரிப்பு"

    • நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
    • பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

    சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.

    நெய் ஹேர் மாஸ்க்

    போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

    நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:

    ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.

    நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

    நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    நெய், தேன் ஹேர் மாஸ்க்:

    போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    • பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
    • வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

    அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

    செய்முறை

    முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

    அதன்பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை கட்டிவிட வேண்டும். பின்னர் இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விட வேண்டும்.

    முக்கிய குறிப்புகள்:

    * எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.

    * உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்தக் கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.

    * கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

    • தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம்.
    • தலைமுடி வறட்சி அடைவதை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.

    கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் முடிகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூந்தலைப் பின்னுவதன் மூலம் இயற்கையான எண்ணெய் பசையையும், ஈரப்பதத்தையும் தக்கவைத்து கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

    தலைமுடியை விரித்த நிலையிலேயே வைத்திருப்பதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை குறைக்க முடியும். கூந்தலை அலைபாயவிடாமல் கட்டி வைப்பதன் மூலம், தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது. தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.

    • தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
    • ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.

    சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

    கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.

    தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.

    எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.

    தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.

    • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
    • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

     சோப்பின் பயன்பாடு:

    சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

     மேக்-அப் போடும் முறை:

    மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

     ஆரோக்கியமான கூந்தல் பெற:

    இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

    மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

     கைகள் பராமரிப்பு:

    இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • எண்ணெய்ச் சுரப்பிகளின் குறைவு காரணமாக கூந்தல் வறட்சியடைகிறது.
    • கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால் அழுக்கு சேர்ந்து விடும்.

    கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எந்த தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழிமுறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட மற்றும் எண்ணெய் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்...

     வறண்ட கூந்தல்:

    தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சித் தன்மை உண்டாகிறது.

    * வறண்ட கூந்தல் உடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான அதாவது மிதமான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

    * விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

    * சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப்போல மின்னும்.

    * வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர்-டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

     எண்ணெய் பசையான கூந்தல்:

    தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

    * எண்ணெய் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்கு குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

    * எண்ணெய் தன்மை கூந்தல் உடையவர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.

    * வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.

    * கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய் பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய் பசை கூந்தல் உடையவர்கள் உணவில் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

    • முடி ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ்.
    • வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ போட்டு அப்ளை செய்யவும்.

    இயற்கையிலேயே மென்மையான கேசம் கொண்ட பெண்களுக்குக்கூட, பனிக்காலத்தில் கேசத்தின் ஈரத்தன்மை போய், வறண்ட சருமமாக மாறிவிடும். இதில் இருந்து தற்காத்துக் கொண்டு, உங்கள் முடியைப் பட்டுப்போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றசில டிப்ஸ்…

    * முடி தன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ். இது, அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும். இதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து… தலைக்கு குளித்து முடித்ததும் கடைசியாக இதனை தலையில் விட்டு அலசவும். வறண்டு டல்லாக இருக்கும் முடிக்குப் புத்துயிர் கொடுக்கும்.

    * வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ பழத்தின் சதைப்பகுதியுடன், முடியின் அளவைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முடிக்கு பேக் போல அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பின் தரமான ஷாம்புவால் முடியை அலசவும். இது சிறந்த கண்டிஷனர்.

    * ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதனுள் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் ஊற்றி சூடுபடுத்தவும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை தலையில் தடவி, வெந்நீரில் பிழிந்தெடுத்த டவலினால் தலையைக் கட்டி, இருபது நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    * கால் கப் பாதாம் எண்ணெயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையிலும் முடியிலும் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். இது கேசத்தை நன்றாகக் க்ளீன் செய்வதுடன், ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

    * சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய பிளெய்ன் மயோனைஸ் (சில்லி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் தவிர்க்கவும்) வாங்கி, இரண்டு ஸ்பூன் மயோனைஸுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து, தலையில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து அலசினால், முடியானது மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கினால், ஹோம் மேட் மயோனைஸ் ரெடி.

    • முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
    • ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைகிறது.

    தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

    குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது. இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம்.

    அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

     1. கரிசலாங்கண்ணி (பிரிங்கராஜ்)

    `மூலிகைகளின் அரசன்' என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

     2. அஸ்வகந்தா

    பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

     3. வெந்தயம்

    நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

     4. பிராமி

    முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

     5. சிகைக்காய்

    தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

     6. நெல்லிக்காய்

    ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

     7. வேப்பிலை

    மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீக்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

     8. ஆயுர்வேத எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

    • சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள்.
    • கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும்.

    சாதம் வடித்த கஞ்சியைக் கூந்தலுக்கும், அரிசி களைந்த நீரை சருமத்துக்கும் பயன்படுத்துவது என்பது சமீபகாலமாக கொரியன் அழகு சிகிச்சைகளில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒன்று.

    சாதம் வடித்த கஞ்சியை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பயன்படுத்தும் பாரம்பரியம் அந்த காலத்தில் இருந்தே உண்டு. சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள். இந்த கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும். பெப்டைட்சின் பலன்களை உறுதிசெய்ய நிறைய ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

    பெப்டைட்ஸ் என்பவை அமினோ அமிலங்கள் தான். அதாவது, ஒருவகை புரதம். இதை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போதும் சரி, உள்ளுக்கு உட்கொள்ளும்போதும் சரி, மிக மிக நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது சருமத்தின் இளமைக்கும் எலாஸ்டிக் தன்மைக்கும் காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். ஆக்சிஜனேற்ற அழுத்தம்' எனப்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

     வெயிலின் தாக்கத்தால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பையும். டி.என்.ஏ பாதிப்பையும் தடுக்கும் தன்மை பெப்டைட்சுக்கு உண்டு என்பதை உறுதிசெய்யும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், சாதம் வடித்த கஞ்சியில் பெப்டைட்ஸ் ஓரளவு உள்ளது உண்மைதான்.

    அதனால் இந்த தண்ணீர் அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது சரியானதுதான். ஆனால், இது மட்டுமே பெப்டைட்ஸ் தேவைக்குப் போதுமானதா என்றால் நிச்சயம் போதாது.

    நம் சருமத்துக்குள்ளும் கூந்தலுக்குள்ளும் ஊடுருவும்படியான வடிவில் பெப்டைட்ஸ் உள்ள பொருட்களை உபயோகிப்பதுதான் சரியானது. வெளிப்பூச்சைவிடவும் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும்போது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். முகத்தைக் கழுவவும் கூந்தலை அலசவும் இந்த தண்ணீரை தாராளமாக உபயோகிக்கலாம். அதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.

    • முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    • வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.

    முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்

    2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

    3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

    4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,

    5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

    6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

    7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.

    8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

    9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

    10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

    11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.

    12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

     ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.

    தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

    அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    • பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்
    • தலைக்கு குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    நாட்டு மருந்து கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள். டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

     பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

    30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களை தடவிய 20 நிமிடங்களில் தலையில் இறங்கும், மேலும் நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை. பிறகு தலைமுடியை நன்கு வாரிவிடவும். இந்த கலவையை சூடுபடுத்தக் கூடாது.

     பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது) கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய தலையில் இந்த கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவ வேண்டும். பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்த கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை. தலைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.

    45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.

    • பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
    • சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்ப்பதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தருவதில்லை, சருமம் மற்றும் கூந்தலுக்கும் தான் ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, மட்டுமின்றி, அவற்றை அழகுப் பொருளாகவும், சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

    இத்தகைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய பழங்கள் பயனுள்ளவையாக உள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான வாழைப்பழம் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. அதேபோன்று காய்கறிகளில் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவையும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

    தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் மட்டுமின்றி, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுப்பதற்கு, பழங்களில் எவை பயன்படுகின்றன என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம்.

     நெல்லிக்காய்

    நெல்லிக்கால் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.

     அவகேடோ

    அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரியுமா என்ன? அவகேடோ சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் நன்மையைத் தருவதாக உள்ளது. அதிலும் ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதற்கு அவகேடோ பழத்தை அரைத்து, அத்துடன், வெந்தயப் பொடி, சிறிது க்ரீன் டீ மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     வாழைப்பழம்

    வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டு போன்றும் மிருதுவாக இருக்கும்.

     கொய்யாப்பழம்

    கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம். எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     பப்பாளி

    கூந்தலை பராமரிக்க சிறந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. அதற்கு பப்பாளியின் ஜூசை, பால் மற்றும் தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     ஆரஞ்சு

    சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்புச் சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.

     பெர்ரிஸ்

    இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கின்றன.

     செர்ரி

    செர்ரி பழங்களிலும், கூந்தல் உதிர்தலை தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.

     ப்ளம்ஸ்

    நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

    பீச்

    பொதுவாக பீச் பழம் ஸ்கால்ப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பொருள். அதிலும் ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாமல், பொடுகுத் தொல்லை இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே இதற்கு ஒரே சூப்பரான தீர்வு என்றால், அது பீச் ஹேர் மாஸ்க் தான்.

     பம்பளிமாஸ்

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பம்பளிமாஸ் பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் ரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     எலுமிச்சை

    எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.

    ×