என் மலர்
நீங்கள் தேடியது "வாகனங்கள் விற்பனை"
- மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2023 மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் 80 ஆயிரத்து 679 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக மஹிந்திரா நிறுவனம் எஸ்.யு.வி. விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் 43 ஆயிரத்து 708 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் 36 சதவீதம் அதிகம் ஆகும்.

ஏற்றுமதியை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை 556 ஆக இருந்தது. மஹிந்திராவின் வர்த்தக பிரிவு வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 25 ஆயிரத்து 715 ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று பயணிகள் வாகன பிரிவிலும் மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 622 பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.
- இருசக்கர வாகனங்கள் விற்பனை 15 சதவீதமும், 3 சக்கர வாகனங்கள் 37 சதவீதமும் அதிகரிப்பு.
- பயணிகள் வாகனங்கள் விற்பனை புதிய உயர்வை அடைந்தது. 3,93,250 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் வலுவான வளர்ச்சி அடைந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 15 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் விற்பனை 15 சதவீதமும், 3 சக்கர வாகனங்கள் 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும், டிராக்டர்கள் 21 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் 0.1 சதவீதம் விற்பனை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராமப்புற சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை வலுவாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை புதிய உயர்வை அடைந்தது. 3,93,250 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2023 நவம்பர் மாத விற்பனை சாதனையை இது முறியடித்து உள்ளது.

இருப்பினும் வாகனங்கள் அதிக இருப்பு நிலை தொடர்ந்து கவலையாக உள்ளது. இது இன்னும் 50-55 நாள் வரம்பில் உள்ளது. வாகன விற்பனையாளர்களுக்கு சவாலாக உள்ளது. டிராக்டர் பிரிவின் விற்பனையும் முந்தைய மாதங்களில் மந்த நிலைக்குப்பிறகு தற்போது உயர்வை அடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன.
- மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA) தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 13 லட்சத்து 53 ஆயிரத்து 280 இருசக்கர வாகனங்கள், 94 ஆயிரத்து 181 ஆட்டோ, 3 லட்சத்து 3 ஆயிரத்து 398 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 65 ஆயிரத்து 574 டிராக்டர்கள், 82 ஆயிரத்து 763 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 46 ஆயிரத்து 328 வாகனங்கள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ''நாங்கள் நடத்திய முந்தைய ஆய்வின்படி பிப்ரவரி மாதம் வாகனங்களின் பதிவு குறைவாக இருக்கும் என்று கணித்திருந்தோம். அதன்படியே அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களின் பதிவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய தேவையை சிறப்பாக சீரமைத்து, இலக்கை அடையும் வகையில் மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு மேம்படும் என்று கருதுகிறோம்'' என்றார்.