search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு கனமழை"

    • பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
    • பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

    அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீராம்பூர் மற்றும் லிங்கர்ஜ்புரா சுரங்க பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • கனமழை காரணமாக கர்நாடக துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்து ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லேஸ்வரம், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணி முதல் அது கனமழையாக கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய பெங்களூரு நகர் முழுவதும் பலத்த மழை கொட்டியது.

    பலத்த மழை காரணமாக பெங்களூரு சதக்கார் நகர், மல்லேஸ்வரம், சாந்தி நகர், மைசூரு வங்கி பகுதி மற்றும் டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழை வெள்ளத்தை பொதுமக்கள் விடியவிடிய கடும் குளிரிலும் அகற்றினர். இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீராம்பூர் மற்றும் லிங்கர்ஜ்புரா சுரங்க பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது. குறிப்பாக மண்யதா தொழில்நுட்ப பூங்கா செல்லும் சாலை, ஓ,ஆர்.ஆர். சாலை, வித்யா ஷில்பா அண்டர்பாஸ் சர்வீஸ் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

    கர்நாடக துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் கட்டுப்பாட்டு அறையில் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்த காட்சி.

    பெங்களூரு நகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கர்நாடக துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்து ஆய்வு செய்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வெள்ளசேத விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ×