search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாராசாமி"

    • எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
    • குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா?

    முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மைசூரு நோக்கி (Mysuru Chalo) நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "என்னை கேள்வி கேட்பதற்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது. மக்கள் அவர்களை விரட்ட வேண்டும்" என்றார்.

    மேலும் சித்தராமையா கூறியதாவது:-

    ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் ஆகஸ்ட் 9 ஆகும். பிற்படுத்தப்பட்ட, சுரண்டப்படும் மக்களை சகித்துக்கொள்ள முடியாத மனுவாதிகளையும், சாதிவெறியர்களையும், நிலப்பிரபுக்களையும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.

    எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு 82 வயதாகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் என்னை ஆகஸ்ட் 10-க்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறார்.

    அவருக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது? அவர் ஒன்றிரண்டு மோசடிகள் மட்டுமா செய்தார்? 18 முதல் 20 மோசடிகளில் பிடிபட்டுள்ளாளர். விஜயேந்திராவும் பல மோடிசகளில் சிக்கியுள்ளார். பாஜக-வின் விஜயபுரா எம்எல்ஏ யட்னால், விஜயேந்திரா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா? 20 நிறுவனங்கள் புதுப்பிக்க நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். என்னை ராஜினாமா செய்ய சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?

    அவர்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும். வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை நான் ஒருபோதும் பின்பற்றவில்லை. நான் அப்படி இருந்திருந்தால் முதலில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. சிறைக்கு சென்றிருப்பார்கள்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×