என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெகதீஷ்"
- தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார்.
- திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.
புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு காக்கிநாடவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஜெகதீஷ் வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த இளம் பெண் ஜெகதீஷை ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனை அறிந்த ஜெகதீஷ் இளம் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராரில் ஈடுபட்டார். கடந்த மாதம் இளம் பெண் வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.
ஜெகதீஷ் இதனை சமையலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து இளம் பெண் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி தான் எடுத்த போட்டோக்களை அந்த பெண்ணிற்கு காட்டினார். அப்போது இளம் பெண்ணுடன் இருந்த வாலிபர் ஜெகதீசை விரட்டி அடித்து விட்டு போலீசில் புகார் செய்வதாக தெரிவித்தார்.
2 நாட்கள் கழித்து ஜெகதீஷ் எடுத்த அரை நிர்வாண போட்டோக்களை இளம்பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அரை நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக ஜெகதீஷ் இளம் பெண்ணை மிரட்டினார். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பஞ்சகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இளம் பெண் செல்போன் எண்ணிற்கு கடைசியாக பேசியவர்கள் யார் என விசாரணை நடத்திய போது அவருடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஜெகதீஷ் நிர்வாண படங்களை காட்டி விரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்