என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூண்டாய் நிறுவனம்"

    • சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
    • இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    அதன்படி, மிச்சாங் புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    மேலும், மாநில அரசுடன் இணைந்து இந்த பேரிடரை எதிர்த்து போராடுவோம் எனவும் அறிவித்துள்ளது.

    ×