என் மலர்
நீங்கள் தேடியது "சூரிய சந்திரப் பிரபைக்காட்சி"
- இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
- உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
சிவபெருமான் சூரிய சந்திரப்பிரபை வாகனங்களில் எழுந்தருளி அருள் வழங்கும் காட்சி திதிக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.
தன்னால் படைக்கப்பட்ட அண்டத்தைத் தானே காத்து வரும் தன்மை உடையவன் என்பதை
எடுத்துக் காட்டும் கோலமே சூரிய சந்திரப் பிரபை வாகனத்தின் தத்துவமாக அமைகின்றது.
உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
திதிக் கோலத்தின் பொருள் என்னவெனில், படைக்கப் பெற்ற அனைத்து உயிர்களையும் இறைவனாகிய பரம்பொருள்
சூரிய சந்திரகோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதாலேயே
பகலும் இரவும், தட்ப வெப்பமும் உண்டாகிறது.
எந்தவொரு தொழிலையும் செய்யவும், எந்தவொரு பொருளையும் பார்க்கவும் முடிகிறது.
அதனால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பதால் அண்ட சராசரங்களையும்காத்து வருகின்றார்
என்ற உண்மை விளங்கவே இந்தச் சூரிய சந்திர பிரபை வாகனத்தின் உட்பொருளை நினைவில் கொண்டு
பரம்பொருளைத் தரிசித்து அருள் பெறுவோம்.