என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரத்"

    • இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது.
    • சூரத் வைர பங்குச்சந்தையை டிசம்பர் 17-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    அகமதாபாத்:

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

    உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என

    அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு கிலோ வெள்ளியில் வைரஸ் பதிக்கப்பட்டுள்ளது.
    • 40 கலைஞர்கள் 35 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

    வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

    இந்த வைர நெக்லஸ் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    40 கலைஞர்கள் 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளது. இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி தெரிவித்துள்ளது. சூர்த்தில் உளள் ராமர் கோவில் போன்று இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது
    • இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்

    குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில், தனது எக்ஸ் பக்கத்தில் முகேஷ் தலாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வெற்றியை சூரத் தொகுதி பெற்று கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், "பாஜகவின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸ் வேட்பளாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஜனநாயக படுகொலை சம்பவத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்" என்று அவர் தெரிவித்தார். 

     

    • வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் 2 மாத வீட்டு வாடகையை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    வீட்டின் உரிமையாளர் ஜெயேந்திர மானவவாலா, ராதே நகர் சொசைட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் கொடுத்துள்ளார்.

    • சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
    • மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது.

    குஜராத்தின் சூரத் நகரை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் ரானே பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயண் ரானே, "நான் ஒரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஆனால் வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தாரே எழுதியதை படித்துள்ளேன். சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்" என்று தெரிவித்தார்.

    சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை, காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்த நிலையில், இன்று நாராயண் ரானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து இந்த விவாதங்கள் உருவாகியுள்ளன.

    ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில், "சிவாஜி சூரத் நகரை கொள்ளையடித்தார்" என்று எழுதியுள்ளார்.

    வரலாற்றுப் புத்தகங்களில் 1664 மற்றும் 1670 ஆகிய ஆண்டுகளில் 2 முறை சூரத்தை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • உணவு விஷயத்தில் அடிக்கடி தனது தாயுடன் மகன் காந்தி தகராறு செய்துள்ளார்.
    • 85 வயது தாய் தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார்.

    சாப்பாட்டில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை மகன் பாத்திரத்தால் தலையில் அடித்து கொலை செய்த் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உத்னா-மக்தல்லா சாலையில் உள்ள பஞ்சஷீல் நகரில் வசித்து வரும் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    காந்தியின் 85 வயது தாய் தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். மகனும் மருமகளும் வேலைக்கு செல்லும் நிலையில் தாய் வீட்டில் சமையல் வேலைகளை செய்து வந்துள்ளார். உணவு விஷயத்தில் அடிக்கடி தனது தாயுடன் மகன் காந்தி தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் தாயுடன் உணவு தொடர்பாக வாக்குவாதம் செய்த காந்தி கோபத்தில் மசாலா பொடிக்கும் சிறிய அளவிலான அம்மி உரலை எடுத்து தாயின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது.  

    தாயார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி வீட்டை விட்டு ஓடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் நிலையை பார்த்து கதோதரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தப்பிச் சென்ற காந்தியை கைது செய்தனர். மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தியிடம் விசாரணை நடத்தி வருவதாக சூரத் டிசிபி விஜய்சிங் குஜ்ஜார் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி இளைஞர் தேம்பித் தேம்பி அழுதார்.

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார்.

    இதை பார்த்த மோடி, இளைஞரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி கையெழுத்திட்டு, இளைஞருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து, சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ×