என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடி உதிர்வு பிரச்சினை"

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
    • உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

    அதேபோல, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவுவது அதிக நன்மை பயக்கும் என நம்பிக்கை உள்ளது. இதனால் கூந்தல் வலுவடைந்து, பளபளப்பை அதிகரிப்பதுடன், கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது. இன்னும் சிலர், கூந்தல் பராமரிப்புக்காக ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து முடிக்கு பயன்படுத்துவார்கள்.

    ஹேர் ஆயிலை ஷாம்பூவுடன் கலந்து தடவுவதால் உண்மையில் ஏதாவது பலன் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

    ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலப்பது புதிதல்ல. இந்த செயல்முறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் இது முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்த நிபுணர்களிடம் பேசினோம். ஷாம்புவில் கேரியர் ஆயில் அல்லது ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து தடவலாம் என்கிறார்கள். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

    தலை முடி உதிர்வதை நிறுத்துவதோடு, முடியை வலுவாக்கும். ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கலாம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    இருப்பினும், நீங்கள் எந்த வகையான ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

    இதுதவிர, நிரப்பப்பட்ட ஷாம்பு பாட்டிலில் ஹேர் ஆயிலைக் கலந்து குளிப்பதற்கு சிறிது நேரம் முன் தடவுவது நல்லது. இது உங்களுக்கு சேரவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.

    நன்மைகள்:

    பல முறை, சரியான அளவு எண்ணெய் மற்றும் ஷாம்பூவை கலந்து தடவுவது உச்சந்தலையில் இருந்து அரிப்புகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, ரோஸ்மேரி எண்ணெயை ஷாம்பூவில் தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இருப்பினும், உங்கள் உச்சந்தலையில் அரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். தூசி, மாசு போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டால், இந்த ஷாம்பூவில் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து உபயோகிப்பது நன்மை பயக்கும்.

    தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். இவற்றில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாட்டின் காரணமாக, முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்தும் முடிவடைகிறது. அதேசமயம் ஷாம்பு கலந்த எண்ணெயை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால், முடிக்கு ஊட்டமளிக்கிறது.

    ×