என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஆர்.எஸ்."

    • கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
    • இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ்இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

    * இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    * கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    * தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.

    * உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு

    * இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    என்று கூறினார். 

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
    • தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×