என் மலர்
நீங்கள் தேடியது "சனீஸ்வர பகவான்"
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் சனி பரிகார தலமாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தந்தாலும் சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக அளவு வருகை தருவார்கள். மேலும் ஆடி மாத சனிக்கிழமை, 18-ம் பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருநள்ளாறு உள்பட முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி சனிப்பெயர்ச்சி மற்றும் அமாவாசையை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றி பரிகார பூஜைகளை செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நவக்கிரக சன்னதி, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
- இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
- இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
இவனுக்கு நீலா, மந்தா என இரு மனைவியர் உண்டு என நூல்கள் கூறுகின்றன.
எமனால் தண்டிக்கப்பட்டு சனியினுடைய வலக்கால் ஊனமாயிற்று என்றும், தட்சயாகத்தினால் ஒரு கண் போயிற்று என்றும் வரலாறு கூறுகிறது.
இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
சனி வழிபட்ட சிவாலயங்கள்:
நெல்லிக்கா,
கொள்ளிக்காடு,
திருநள்ளாறு
- ருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.
- பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
திருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன. இதுபற்றி ஆலய குருக்கள் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கூறியதாவது:
1. முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும். புனித நீராடி முடித்ததும், துணிகளை நளதீர்த்தத்தில் எக்காரணம் கொண்டு போடக்கூடாது. தீர்த்தத்துக்கு வெளியில் கரையில்தான் போட வேண்டும்.
2. நள தீர்த்தத்தில் நீராடி முடித்ததும் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
3. பின்னர் ஆலயத்துக்கு வந்து மூலவரான தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிகளை வழிபட வேண்டும்.
4. இதையடுத்து கோவிலை வலம்வந்து வழிபட வேண்டும்.
5. பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
6. இறுதியில் அருகில் உள்ள பிரணாம்பிகா அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும்.
7. வெளியில் வந்து கொடிமரம் அருகில் விழுந்து வணங்க வேண்டும்.
8. ஆலயத்தின் வெளி பிரகாரத்தில் திலதீபம் ஏற்ற வேண்டும்.
9. முடிவில் ஆலயத்தில் சிறிதுநேரம் அமர்ந்து செல்ல வேண்டும்.
10. இயன்ற தானதர்மங்கள் செய்வது மிகவும் நல்லது.
- வாணி தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது.
- கங்கா தீர்த்தம் சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது.
*பிரம்ம தீர்த்தம்: இது பிரம்மாவால் ஏற்பட்டது. இது இறைவனின் ஆலயத்திற்குக் கிழக்கே உள்ளது. மார்கழி மாதம் அதிகாலையில் இதில் நீராடி இறைவனை வழிபட்டு வர காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும்.
*வாணி தீர்த்தம்: இத்தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது. இதில் 48 நாட்கள் மூழ்கி இறைவனை வழிபட்டால் கலைகளில் வல்லமை உண்டாகும்.
*அன்ன தீர்த்தம்: இது அன்னத்தால் உண்டாக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி அகழியாய் ஓம் என்னும் எழுத்துப் போல இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மூழ்கினால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.
*நள தீர்த்தம்: இது நளனால் உண்டாக்கப்பட்டது. இது கோவிலின் வடக்குப் பக்கம் உள்ள குளம் ஆகும். இதில் எண்ணெய்த் தேய்த்துக் குளித்து இறைவனை வழிபட்டால் சனிபகவான் தோஷம் நீங்கும். இதில் நவக்கிரகங்களுக்கும் தனித்தனிக் கிணறுகள் உள்ளன.
* கங்கா தீர்த்தம்: இது சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது. இதனைக் கண்ணால் கண்டாலே பாவங்கள் தொலையுமாம். இது நள தீர்த்தக் கரை, நள விநாயகர் ஆலயத்துள் உள்ள கிணறு ஆகும். கங்கா கூபம் என்று இதனைக் கூறுவர். நளகூபம் என்றும் கூறுவர். அமாவாசை, பவுர்ணமி நாள்களில் இத்தீர்த்தத்தால் இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்வர்.
* அட்டத்திக்குப் பாலகர் தீர்த்தங்கள்: இந்திரன் முதலான அட்டதிக்குப் பாலகர்களும் தங்கள் தங்கள் திக்குகளில் தங்கள் பெயரில் எட்டுத் தீர்த்தங்கள் உண்டாக்கி, தீர்த்தக் கரைகளில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளனர். இவை கோவிலைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அமைந்துள்ளன. இவற்றில் தீர்த்தமாடினால் சிவபதம் கிடைக்கும் என்று இதன் மகிமை கூறப்படுகிறது.
* அகஸ்தியர் தீர்த்தம்: அகஸ்த்தியரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம். கோவிலின் வடக்கில் உள்ளது.
* அம்ஸ தீர்த்தம்: அனைத்துத் தேவர்களும் ஒன்றுகூடி ஏற்படுத்திய தீர்த்தம் இது.
- சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
- ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.
2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.
4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.
5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.
7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.
- அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.
"நமஸ்தே கோண ஸம்ஸ்தாய
பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே பப்ருரூபாய
குஷணாயக நமோஸ்துதே
நமஸ்தே ரெளத்ர தேஹாய
நமஸ்தே சாந்த காயச
நமஸ்தே மந்த ஸம்ஜ்ஞாய
ஸநைஸ்சர நமோஸ்துதே"
என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் ஏழரை சனி உள்ளவர்கள் சனீஸ்வரனின் கருணையைப் பெறுவார்கள்.
அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.
சனீஸ்வரன் காயத்ரி
"காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்"
இதை தினசரி பாராயணம் செய்வது நல்லது.
- சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.
- அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.
கிரகங்களின் கையில் நம் வாழ்க்கை உள்ளது.
குறிப்பாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆயுட்காரனாக பலரது வாழ்க்கையில் குறிப்பிட்ட இடத்தை பெறுகிறார்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு போவதற்கு அதிகப்படியாக சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்ளும் கிரகமாகவும் விளங்குகிறார்.
இந்த இரண்டரை ஆண்டுகளில் பலருக்கு பலவிதமான மாற்றத்தையும் திருப்பங்களையும் ஏற்படுத்துகிறார்.
ஸ்ரீ சனிபகவான் கெடுதலையும் தீமையையும் தரக் கூடிய கிரகம் அல்ல அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ சனிபகவான் சிரமங்களையும் கெடுதல்களையும் அவர் பிரவேசிக்கும் ஸ்தானத்தை அடிப்படையாகக்
கொண்டும் பூர்வ ஜென்மம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தினை அடிப்படையாகக் கொண்டும்
அளவோடு கெடுதல்களை செய்வார்.
முற்பிறவியில் கடுமையானப் பாவங்கள் செய்தவர்கள் இப்போதைய பிறவியில் அசுப பலன் தரும் ஸ்தானத்திற்கு
வரும் போது ஏழரைச் சனி அஷ்டமி சனி காலங்களில் தீமையான பலன்களையும் குற்றத்திற்கு தகுந்த
தண்டனையையும் மட்டுமே அவர் அளித்தருள்வார்.
சனி பகவானை போன்று கொடுப்பாரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பார்களே அதன்படி அவரின் முன்னால் படித்தவர் பதவி உள்ளவர் பணம் படைத்தவர் ஏழை என்ற எந்த பாகுபாடும் அவரிடம் கிடையாது.
அவர் அவருக்கு உரிய பலன்களை அந்தந்த காலங்களில் சஞ்சாரத்தின் போது உணர்த்தும் விதமாகவும் மனம் மாறும் விதமாக அளிப்பார்.
ஆனால் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இருந்தாலும், தெய்வ பக்தியுடன் உள்ளவர்கள்,
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்த அப்பாவிகள் செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துபவர்கள்,
தர்ம சிந்தனை உள்ளவர்கள் பிறருக்கு எப்போதும் மனதால் தீங்கும் தொல்லைகளையும் கொடுக்காதவர்கள்,
இவர்களுக்கு சலுகைகள் கொடுப்ப தோடும், திருந்தவும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து ஏழரைச் சனியின்,
அஷ்டமத்து சனியின் காலத்தின் போது கூட தண்டிப்பதில்லை.
சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.
மனிதனாக அவதாரம் எடுத்து இருப்பது அவனோடு அருளால்தான் என்று இந்த புவியில் கூடுமானவரை தீமை செய்யாமல் எல்லோருக்கும் நன்மைகளை செய்து வந்தால் நிச்சயம் அவரின் அருள் கிடைக்கும்.
இவ்வாறு தனக்கென ஒரு நியாயத்தையும், நீதியையும், தர்மத்தையும் அடிப்படையாக கொண்ட
சட்ட சாம்ராஜ்ஜியத்தை கொண்டு உரிய காலத்தில் உரிய தண்டனையே கொடுப்பதால் சனி பகவான் நீதியை நிலைநாட்டுபவர் ஆகிறார்.
- திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.
- நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.
திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.
ஸ்ரீ சொர்ண கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீபிராணாம்பிகை பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் மற்றும் முக்கிய சன்னதிகளைக் கொண்டவை ஆகும்.
இந்த மூர்த்திகள் தனிச்சிறப்பும் புராதன பெருமையும் அருணகிரிநாதராலும் நால்வராலும் பாடல் பெற்றவையாகும்.
பக்தர்கள் திருநள்ளாருக்கு சனிக்கிழமையில்தான் செல்ல வேண்டும் என்பதும், பூஜைகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் மட்டும் செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தி தவறாக வழிக்காட்டுகின்றனர்.
பக்தர்கள் இதை மனதில் வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்து இருந்து சில நிமிடம் மட்டுமே ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகின்றது.
மேலும் அபிஷேகம் போன்றவற்றை சிறிய இடத்தில் நின்று சிரமப்பட்டு தரிசிக்கின்றனர்.
ஆனால் சனிபகவானை வாரத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்து பூர்ண அனுக்கிரகத்தை பெற முடியும்.
புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்யும் பக்தர்கள் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும்.
அது மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் சனி ஹோரை என்று சொல்லப்படும் நேரம் 1 மணி நேரம் உள்ளது.
ராகு ஹோரை காலத்தில் ராகுவை வழிபடுவது நல்லதை கொடுக்கும்.
அதே போல் சனிஹோரையில் தரிசனம், பூஜைகள் செய்வது நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.
- தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.
- இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
நிடத நாட்டு மன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தமயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான்.
தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.
நளனிடம் ஏதும் குறை காணாது 12 ஆண்டுகள் காத்திருந்து, நளன் ஒருநாள் சந்தியா வந்தனம் செய்யும்போது காலில் நீர் பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனை பற்றினார்.
இதனால் நளன் கடும் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கிய பின்னருங்கூட, சனியின் வேகம் தணியாமல் தீர்த்த யாத்திரையை நாரதர் உபதேசப்படி மேற்கொண்டான்.
விருத்தாசலம் சிவ ஆலயத்தில் சந்தித்த பரத்வாஜ முனிவர் திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார்.
அவ்வாறே நளன் திருநள்ளாறு அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துக்குள் நுழைந்தான்.
அவனை பற்றி இருந்த சனி உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கி விட்டார்.
இதனால் இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
- பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.
- ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.
திருநள்ளாறு தர்ப்பண்ணேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக திகழ்கிறார்.
பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.
எனவே திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டால் நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும்.
இழந்த பதவி தேடி வரும். பதவி உயர்வு தானாக வரும். செல்வங்கள் குவியும். செல்வாக்கு அதிகரிக்கும்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். புகழ் ஓங்கும்.
இப்படி சனீஸ்வர பகவான் வேண்டிய வரம்களை எல்லாம் வாரி வழங்கும் கற்பகவிருட்சமாக இருக்கிறார்.
- திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது.
- திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.
1. திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது. உங்கள் வசதிக்கு ஏற்ப, உங்கள் சக்திக்கு ஏற்ப வழிபடலாம்.
2. திருநள்ளாறு தலத்தில் கால் வைத்தாலே போதும், ஏழரை சனி, அஷ்டமத்துவ சனி, சனி திசை போன்ற அனைத்து விதமான சனி தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும்.
3. திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள். சனிக் கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கும்.
4. திருநள்ளாறு தலத்தில் கையெடுத்து கும்பிட்டு நமஸ்காரம் செய்யக்கூடாது என்று சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர். இதை பக்தர்களும் மூட நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்கள். ஆலயத்துக்குள் வந்துவிட்டாலே ஈசனை வழிபட வேண்டும் என்பது விதியாகும் என்று சிவாச்சாரியார் டி.ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.
5. சிலர் திருநள்ளாறு தலத்துக்கு வந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவும் பக்தர்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கை என்று ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.
6. பொதுவாக சிலர் மற்றவர்களை திட்டும்போது "சனியனே" என்று திட்டுவதுண்டு. இப்படி திட்டுவது சனிபகவானை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். 'சனியனே' என்று சொல்ல சொல்ல அது சனீஸ்வர பகவானை கோபப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
7. ஒவ்வொருவரது வாழ்விலும் 4 தடவை சனீஸ்வர பகவான் வருவார். மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி என்று அதை சொல்வார்கள். அதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப திருநள்ளாறு சென்று வழிபட்டால் முழுமையான பலன்களை பெறலாம்.
8. வெளியூர்களில் இருந்து திருநள்ளாறு தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நேரிடையாக வீட்டுக்குதான் செல்ல வேண்டும். வேறு கோவில்களுக்கு செல்லக்கூடாது என்று விவரம் தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு பிறகு மற்ற தலங்களுக்கு தாராளமாக செல்லலாம்.
9. திருநள்ளாறு தலத்தில் நவக்கிரக ஹோமம் நடத்தினால் நிச்சய வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.
10. திருநள்ளாறில் வழிபட்டால் நோய்கள் நீங்கும். செல்வம் பெருகும். கல்வி வளரும். திருமண யோகம் உண்டாகும். களத்தர தோஷம் நீங்கும். விவசாயம் செழிக்கும். எண்ணை வியாபாரம் மேம்படும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11. புதிதாக வீடு, நிலம் வாங்க விரும்புபவர்கள் திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு விட்டு சென்றால் வெற்றி உண்டாகும். பூமி தொடர்பான வழக்குகளில் திருநள்ளாறு சனிபகவான் வெற்றி தேடித்தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
12. திருநள்ளாறு தலத்துக்கு செல்பவர்கள் தவறாமல் எள் தீபம் ஏற்றுவது நல்லது. இந்த எள் தீபத்தை ஆலயத்திலேயே தருகிறார்கள். ஒரு நபர் ஒரு தீபம் ஏற்றினால் போதுமானது. சிலர் தங்கள் வயதுக்கு ஏற்ப 30 வயது என்றால் 30 தீபம் ஏற்றுகிறார்கள். அப்படி ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
13. திருநள்ளாறு தலமானது 100 சதவீதம் திருப்பதி தலத்துக்கு இணையானது. திருநள்ளாறில் ஈசனும், திருப்பதி வெங்கடாஜலபதியும் கருணை காட்டாமல் எந்த பக்தனும் அந்த தலங்களுக்கு செல்ல இயலாது.
14. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அதே போன்றுதான் திருநள்ளாறுக்கு சென்றாலும் திருப்பம் வரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பம் மட்டுமின்றி வாழ்வில் முன்னேற்றத்தையும் தரும் தலமாக திருநள்ளாறு தலம் திகழ்கிறது.
15. திருநள்ளாறில் தர்ப்பண்ணேஸ்வரருக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.
16. சனீஸ்வர பகவானுக்கு கருநீல வஸ்திரம் சாத்துவது நல்லது. பக்தர்கள் வஸ்திரங்களை உபயமாக எடுத்து கொடுக்கலாம்.
17. சில பக்தர்கள் திருநள்ளாறுக்கு ஏழரை சனி தோஷம் இருப்பவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று தவறான கருத்துடன் இருக்கிறார்கள். இத்தகைய தகவல் பரவி இருப்பதில் உண்மையில்லை. எல்லா பக்தர்களும், எல்லா நாட்களும் திருநள்ளாறு தலத்துக்கு சென்று வழிபடலாம்.
18. திருநள்ளாறு தலத்தில் வழிபாடு செய்ய சிறப்பு விதிகள் எதையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. மற்ற ஆலயங்களில் நீங்கள் எப்படி வணங்குகிறீர்களோ அப்படி வழிபட்டாலே போதும்.
19. திருநள்ளாறு செல்பவர்கள் நளத் தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்பது அவசியமானது. புனித நீராட முடியாதவர்கள் அந்த தீர்த்தத்தை எடுத்து தலையிலாவது தெளித்துக் கொள்ள வேண்டும்.
20. திருநள்ளாறு நள தீர்த்தத்தில் உள்ள தண்ணீர் வாரத்துக்கு ஒரு தடவை முழுமையாக மாற்றப்படுகிறது.
21. திருநள்ளாறு தலத்துக்கென தங்க ரதம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த தொகைகளை அன்பளிப்பாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்.
- இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார்.
இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்.
இவருக்கு சுவர்க்கலா தேவி(உஷாதேவி), சாயாதேவி என்ற இரு மனைவிகள்.
அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.
மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.
சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை.
அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது.
இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.
சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தனிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு "சாயாதேவி" என்று பெயர் சூட்டினாள்.
தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், "நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்" என்று கூறினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, "சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன்.
ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை" என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.
தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள்.
அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.
அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள்.
இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார்.
அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.
சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது.
தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.
அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார்.
அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேதராக காட்சி அளித்தார்.
அப்போது சிவபெருமான் சனிபகவானை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு சனி பகவான், "எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்" என்றார்.
மேலும், "உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர்.
நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்" என்றும், "இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்" என்றும் வரம் கேட்டார் சனிபகவான்.
அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு "சனீஸ்வரர்" என்ற பெயர் விளங்க அருள்பாலித்தார்.