என் மலர்
நீங்கள் தேடியது "திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்"
- 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
- ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
திருநள்ளாறு:
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் நேற்று முன்தினம் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்து, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடப்பதாலும், தொடர் மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவின் 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நளன்குளத்தில் புனித நீராடி கலிதீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் சனீஸ்வரனை தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல் மாலை வரை சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.