என் மலர்
நீங்கள் தேடியது "தோஹா"
- பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
- பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்
கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.
இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.
85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.
பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.
கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.
இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.
இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.
- இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.
- விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான கியூ.ஆர். 017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இன்று மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் போது துருக்கி நாட்டின் மேலே சென்றபோது, இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.
இதில் விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து விமானம் டப்ளின் நகரில் தரையிறங்கியது. விமானம் நடுவானில் குலுங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலையதில் இருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காயமுற்ற பயணிகளுக்கு உதவினர். முன்னதாக லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தார்.
- கத்தாரில் நடந்த தோஹா மாநாட்டில் இந்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
- அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை என தெரிவித்தார்.
தோஹா:
கத்தார் நாட்டில் 22-வது தோஹா மாநாடு நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். கத்தார் மற்றும் நார்வே நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி நோட்டுகள் அறிமுகம் என வெளிவந்த செய்தி பற்றி பேசுகையில் இதனை குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் தோஹா மாநாட்டில் பேசியதாவது:
டிரம்பின் முதல் நிர்வாகத்தின்போது, அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல, வலுவான உறவை கொண்டிருந்தோம்.
சில பிணக்குகள் உள்ளன. அவை, வர்த்தகம் சார்ந்தவையாக உள்ளன. டிரம்ப் அதிகாரத்தின் கீழ்தான் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இடையே தனிப்பட்ட நட்புறவு உள்ளது. அது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு உறவுக்கு பங்காற்றியது.
இந்தியா ஒருபோதும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியதில்லை என எப்போதும் கூறிவருகிறோம். பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவித முன்மொழிவும் இதுவரை இல்லை. நிதிப்பரிமாற்ற விஷயங்களைப் பற்றியே பிரிக்ஸில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா எங்களுடைய மிக பெரிய வர்த்தக நட்பு நாடு. டாலரை பலவீனப்படுத்த எங்களுக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்தார்.