என் மலர்
நீங்கள் தேடியது "கீதா கோவிந்தம்"
- விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இந்த வதந்திக்கு நடிகர் விஜய் தேவர கொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.

இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் பொய்யானது என விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, 'நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.

என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்' என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
- சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர்.
- நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா பீகாரில் வைத்து பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அதன் நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். புஷ்பா ஒன்றில் அல்லு அர்ஜூன் காதலியாக நடித்த பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தில் அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர். விழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது மேடை ஏறிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார். அதாவது, நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது திரைத்துறைக்கு வெளியிலிருந்து மாப்பிளை தேடுகிறீர்களா என்று கேள்வி கேட்டார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த ராஷ்மிகா, எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியும் என்று சிம்பிளாக பதிலளித்தார். முன்னதாக நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சத்துக்கு வந்த ராஷ்மிகா அவருடன் காதலில் உள்ளார் என்று கூறப்பட்டது.


இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து அரசல் புரசலாக திரை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் தற்போது தனது சாய்ஸ் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருப்பது அவர்களின் உறவை உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் புளகாங்கிதத்தில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.