என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம் வரலாறு"

    • அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
    • அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகை.

    * முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்

    * அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை

    * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்

    * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி

    * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம் இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்.

    `வேல்' என்றால் என்ன?

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம். `வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு `வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் -வெற்றி என்று அர்த்தமாகும். ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் -வேல் ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு.

    சங்ககாலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது. பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்.

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது. வேல் வழிபாடுன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது. பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது வெறும் வேல் வழிபாடு தான்.

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது. வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்.

    * வேலின் முகம் -அகன்று விரிந்து இருக்கும் ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்.

    * வேலின் கீழ் நுனி - வட்டமாக முடியும் ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

    * வேல் - பெருமை மிக்கது மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்.

    * ஈட்டி - அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு.

    * வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை.

    * ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன.

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், `வேல்' முன்னிறுத்தி, தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள். தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள் பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம் முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்.

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர். முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்.

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல. முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு. ஆறு படைகள் உண்டு.

    • முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
    • முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

    இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

    இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.


    தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.

    சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

    சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

    அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றினான்.


    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.


    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

    முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    ×