search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரும பராமரிப்பு"

    • பார்லியில் தயாராகும் தேநீர் கொரியாவின் பிரபலமான பானமாகும்.
    • ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

    கொரியா நாட்டு மக்கள் பின்பற்றும் உணவுப்பழக்கமும், வாழ்வியல் முறையும் உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது. அதற்கேற்ப சரும பராமரிப்பு முதல் சமச்சீர் உணவுகள் வரை ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

    இளமையையும், சுறுசுறுப்பையும் தக்கவைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற 10 கொரிய பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

    1. குடல் ஆரோக்கியம்

    கொரிய உணவில் கிம்ச்சி, தயிர் போன்ற புளித்த உணவுகள் பிரதானமாக இடம் பிடிக்கின்றன. இந்த உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. அவை குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

    வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், ஊறுகாய் மற்றும் பாரம்பரிய புளித்த பானங்களை விரும்பி உண்கிறார்கள். இத்தகைய உணவுப் பதார்த்தங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

    2. பார்லி தேநீர்

    'போரி சா' எனப்படும் பார்லியில் தயாராகும் தேநீர் கொரியாவின் பிரபலமான பானமாகும். இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், செரிமானம் சுமுகமாக நடைபெறவும் உதவும். இந்தியர்கள் பார்லி டீ பருகுவது டீ, காபி போன்ற காபின் சேர்க்கப்பட்ட பானங்களுக்கு மாற்றாக அமையும். உடலில் நீர்ச்சத்தை பேணவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு புத்துணர்ச்சியூட்டவும் உதவும்.

    3. உடல் செயல்பாடு

    கொரியர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் காலை நேர நடைப்பயிற்சி, யோகாசனம் மேற்கொள்ளலாம்.

    வார இறுதி நாட்களில் குறுகிய தூர பயணம் மேற்கொள்ளலாம். கொரியர்களை போலவே இந்த உடல் செயல்பாடுகளை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.

    4. சரும பராமரிப்பு

    கொரியர்கள் சரும பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமத்தில் படியும் மாசுக்களை நீக்குவது, இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்வது, ஈரப்பதத்தை தக்க வைப்பது, சூரிய ஒளிக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது என சரும நலனில் அக்கறை கொள்வார்கள். காற்று மாசுபாடு மற்றும் கடுமையான வானிலையால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இந்த வழக்கங்களை பின்பற்றலாம்.

    5. சமச்சீர் உணவு

    கொரிய உணவுகளில் காய்கறிகள், சத்து குறைந்த புரத உணவுகள் மற்றும் கிம்ச்சி போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. அதுபோல் இந்தியர்கள் தங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் புளித்த உணவுகளை சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் துணை புரியும்.

    6. பெரியவர்களுக்கு மரியாதை

    கொரியர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் வழங்குகிறார்கள். தியானம் மற்றும் நினைவாற்றல் போன்ற பயிற்சிகள் மூலம் மன நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

    பிறர் செய்த உதவிகளுக்கு நன்றியுணர்வை கடைப்பிடிப்பதிலும், குடும்ப மரபுகளை மதிப்பதிலும் தனித்துவமிக்கவர்களாக விளங்குகிறார்கள். இதனை பின்பற்றுவதன் மூலம் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

    7. பாரம்பரிய மூலிகை தேநீர்

    கொரியர்கள் ஜின்ஸெங் டீ, கிரீன் டீ உள்பட பல்வேறு மூலிகை தேநீர்களை உட்கொள்கின்றனர். செரிமானம் மற்றும் மன நிலையை மேம்படுத்தும் தன்மைகளுக்காக மூலிகை தேநீரை ருசிக்கலாம்.

    8. உணவு சாப்பிடும் முறை

    கொரியர்கள் நிதானமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். சாப்பிடும் சமயத்தில் வேறு எதிலும் கவனம் பதிக்கமாட்டார்கள். ஒவ்வொரு முறை உணவை உட்கொள்ளும்போதும் நன்கு மென்று அதன் ருசியை ஆழ்ந்து ரசிக்கிறார்கள்.

    இந்தியர்களை பொறுத்தவரை அவசரமாக உண்ணும் வழக்கத்தைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் வேகமாக சாப்பிடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் சாப்பிடும் வேகத்தை குறைத்தும், அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தும் உணவை ருசிக்கலாம். இந்த பழக்கம் செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் வித்திடும்.

    9. குடும்ப நேரம்

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது கொரியர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். வெளி இடங்களில் சாப்பிட அதிகம் விரும்ப மாட்டார்கள். வீட்டில் தயாராகும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் விரும்புவார்கள். அதன் மூலம் குடும்ப ஒற்றுமை உணர்வை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வழக்கத்தை பின்பற்றி குடும்ப பிணைப்புகளை வலுப்படுத்தலாம்.

    10. காலை உணவின் முக்கியத்துவம்

    கொரியர்கள் ஒருபோதும் காலை உணவைத்தவிர்க்க மாட்டார்கள். பெரும்பாலும் சத்தான, சமச்சீரான காலை உணவை உட்கொள்கிறார்கள். அதில் முழு தானியங்கள், பழங்கள், புரதங்கள் உட்பட ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்கிறார்கள்.

    காலை உணவை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றலையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

    • வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.
    • 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம்.

    வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். முன்கூட்டியோ, விரைவாகவோ முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கலாம். அதற்கு வித்திடும் விஷயங்கள்...

     சிவப்பு குடைமிளகாய்

    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'சூப்பர் புட்' உணவாக கருதப்படும் இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது.

    மேலும் சரும நலனுக்கு நன்மை சேர்க்கும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப்போராட உதவும். சூரியக்கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

    பப்பாளி

    உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பொருள், பப்பாளி. இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

    இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். வயதான அறிகுறிகள் வெளிப்படுவதை தாமதப்படுத்தும்.

    ப்ளூபெர்ரி

    இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அவற்றில் உள்ளன. மேலும் கொலாஜன் இழப்பைத் தடுத்து பொலிவான சருமத்தை தக்கவைக்கவும் உதவும்.

    புரோக்கோலி

    வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட காய்கறியாக புரோக்கோலி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையையும் அளிக்கிறது.


    அவகேடோ

    இந்த பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வித்திடுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகுக்கு அடிகோலுகிறது.

    • வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.
    • எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. கற்றாழை வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.

    தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்தில் கூட வளரும். இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கற்றாழை ஜெல் சருமத்தை வறண்டு போகச்செய்யாமல் பாதுகாக்க உதவுகிறது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.

    முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. எனவே அவை முகத்தில் உள்ள வடுக்களை நீக்க உதவுகின்றன. தினமும் இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    • தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது.
    • ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

    மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    * ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    * தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

    * அன்றாடம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக்கொள்வதுடன் இரவு தூக்கமும் சரும அழகிற்கு உதவுகிறது. தினமும் 6 முதல் 8 மணிநேர உறங்குவதால் காலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.

    * சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. உடற்பயிற்சி சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறங்கும் முன் தோலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

    * சன்ஸ்கிரீனை கோடையில் மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. வருடத்தின் அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை தடுக்கிறது.

    * மன அழுத்தமே முடி உதிர்தல், முடி நரைத்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் தியானம், இசையை கேட்பது, பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படும்.
    • பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள்.

    காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

    சூடான நீரை பயன்படுத்துதல்:

    சூடான நீரை கொண்டு ஒருபோதும் முகம் கழுவக்கூடாது. வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீரும் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவதுதான் சரியானது.

    ஈரப்பதமான துடைப்பான் பயன்படுத்துதல்:

    `வெட் வைப்ஸ்' எனப்படும் ஈரப்பதமான துடைப்பான்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவற்றை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவை தற்காலிகமாக முகத்தை சுத்தம் செய்தாலும், சருமத்தில் படிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் பசைத்தன்மை மற்றும் அழுக்கை முழுமையாக அகற்றாது. சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி சருமத்திற்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். அதனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

     சோப் உபயோகித்தல்:

    தோல் வகைக்கு பொருத்தமான பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கடினத்தன்மை கொண்ட சோப், கிளென்சரை பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பேஸ்வாஷை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

     அழுக்கு துண்டு பயன்படுத்துதல்:

    முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்யவேண்டும். அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

     சருமத்திற்கு அழுத்தம் கொடுப்பது:

    கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியை கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

    இறந்த செல்களை அகற்றுதல்:

    குறிப்பிட்ட கால இடைவெளியில் இறந்த சரும செல்களை நீக்குவது முக்கியமானது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இறந்த செல்களை நீக்குவதற்கு தோல் வகைக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்போலியண்டை தேர்வு செய்வது நல்லது.

     எத்தனை முறை முகம் கழுவலாம்?

    காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாடால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒருமுறை முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும். எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

    • பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும்.
    • கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    முகத்தில் இயற்கையான பளபளப்பு தோன்றும் வகையில் அழகுபடுத்த பெண்கள் பல வகையான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் சருமம் உள்ளிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே இயற்கையான பளபளப்பை பெற நீங்கள் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பாதவர் யார்? பெண்கள் அழகாக இருக்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். மேலும் பல கிரீம்களை தங்கள் முகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையான பளபளப்பைக் காண விரும்பினால், சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக மாற்றுவது தான்முக்கியம்.

    இதற்காக, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை கடைப்பிடித்தால், படிப்படியாக தோல் பிரச்சினைகள் மறைந்துவிடும், மேலும் சில அழகுசாதனப் பொருட்களில் இருந்தும் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

    அன்றாட வழக்கத்தின் நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை நோய்களில் இருந்து விலக்குவது மட்டுமல்ல. இதனுடன், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே எந்தெந்த நல்ல பழக்கங்கள் உங்கள் முகத்தில் பொலிவைத் தரும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

    நாம் விழா அல்லது வெளியில் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேவையவற்றை உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 10 நாட்கள் அல்லது 1 வாரத்திற்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ருட் போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். ஜங்க்புட் தவிர்த்துவிட வேண்டும்.

    தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கைகால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இரவில் தூங்கும்போது தேங்காய் எண்ணெய், கற்றாழை, வைட்டமின் E மாத்திரை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து தூங்கி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    அதன்பிறகு பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும். இதை விட முக்கியமான ஒன்று தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன் மாசு மருக்கள் தவிர்க்கலாம்.

    காலை உணவு முதல் இரவு உணவு வரை சரியான நடைமுறையைப் பின்பற்ற முடியும், மேலும் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக மாறும். கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டிடாக்ஸாக வேலை செய்கிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் பச்சை மற்றும் பருவகால காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து, சீரான உணவைப் பின்பற்றுங்கள்.

    ரோஸ் வாட்டர் சிறந்த இயற்கை மூலப்பொருளாகும், இது சருமத்தை அழகாக்க பயன்படுகிறது. தினமும் இதை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

    • சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
    • சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

    கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

     

    1. சரும பராமரிப்பு:

    கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலக்காதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம்தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

     2. சன்ஸ்கிரீன் பயன்பாடு:

    சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமான நாட்களில் கூட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நேராமல் தற்காத்துக்கொள்ள அவை உதவுகின்றன.

    3. புளிப்பு வகை உணவு:

    கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உட்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கும் வித்திடும் புரோபயாட்டிக்குகள் நிறைந்தவை.

    4. நீர் அருந்துதல்:

    உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    5. தூக்கம்:

    ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்திற்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

    கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.

    7. மன அழுத்தம்:

    மன அழுத்தமும் முகப்பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.

    8. உணவு வழக்கம்:

    கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பேணவும் வழிவகுக்கிறது.

    • அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.
    • ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது.

    பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் காஜல், மஸ்காரா, பவுண்டேஷன், ஐ லைனர், லிப் லைனர், ரோஸ் என பல பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. அந்தவகையில், மேக்கப் போட விரும்பாத பெண்களாக இருந்தால் அழகுகுறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

     தண்ணீர் குடித்தல்

    உடலில் நீர்ச்சத்து குறையும் போது சருமம் வறண்டு விடக்கூடும் என அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

     புருவங்களைத் திருத்துதல்

    பெண்களின் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் புருவ அழகுதான். அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களைத் திருத்திக் கொள்ளலாம். மேலும், கண்மைகளை பயன்படுத்தி புருவத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

     சரும பராமரிப்பு

    சருமத்தில் எவ்வித பிரச்சனைகள், அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்க, முகத்திற்கு எண்ணெய் மற்றும் சீரம் பயன்படுத்தவும். மேலும், ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அதிகளவு உண்ணவேண்டும்.

     ஹேர் ஸ்டைல்

    மேக்கப் விரும்பாத பெண்கள், சிகை அலங்காரத்திலும் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆடைகளுக்கு ஏற்ற விதவிதமான ஜடைகள், பூக்கள் போன்றவற்றை வைத்து அழகாக்கிக்கொள்ள முடியும்.

     உதடு பராமரிப்பு

    உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்ல லிப் பாம் மட்டும் உபயோகிக்கலாம்.

     உடைகளில் கவனம்

    உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை அணிவது உங்களை அழகாக காட்டும்.

    இயற்கை அழகுசாதனப் பொருள்கள்

    முகத்திற்கு மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற இயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.

     மகிழ்ச்சியாக இருத்தல்

    ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே முகம் அழகாக தெரியும்.

     தூக்கம்

    சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் கண்களை சுற்றி கருவளையம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது தூக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    • வீட்டு உபயோகப்பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
    • தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    சருமத்துக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோகப்பொருகளை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

    தினமும் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சருமப் பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வித்திடும்.

    ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த செயல்முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். `பளிச்' தோற்றத்தையும் தரும்.

    ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குழைத்து முகத்தில் பூசவும். அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.

    • சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.
    • குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

    குங்குமப்பூ எண்ணெய் மசாஜ்

    குங்குமப்பூ எண்ணெய்யுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் சேர்த்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.

     குங்குமப்பூ பேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் சிறிதளவு குங்குமப்பூ இழைகளை கலந்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். சருமத்துக்கு கூடுதல் பிரகாசம் அளிக்கும்.

    கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சூரிய கதிர்வீச்சுகளின் வீரியம் அதிகமாக இருக்கும் வேளையில் வெளியே நடமாடினால் சருமம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும். அதனை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க விரும்புபவர்களின் தேர்வாக குங்குமப்பூ அமைந்திருக்கிறது. அது வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது. வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * குங்குமப்பூவில் குரோசின், குரோசெடின், சப்ரானால் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் மற்றும் சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.

    * குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    * குங்குமப்பூவில் வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை சரும வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை. இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் துணை புரியும்.

    * குங்குமப்பூவில் உள்ள இயற்கையான கரோட்டினாய்டுகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை.

     சரும பராமரிப்புக்கு ஏற்ற குறிப்புகள்:

    நீரேற்றத்துடன் இருங்கள்:

    சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:

    தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

    சமச்சீர் உணவை உண்ணுங்கள்:

    பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகள், பெர்ரி வகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சருமத்தை சுத்தம் செய்யுங்கள்:

    சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தவறாமல் சுத்தப்படுத்துங்கள். வெளி இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் 'பேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவுங்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை சுத்தம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள். இறந்த செல்களை அகற்றவும், மென்மையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

    • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
    • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

     சோப்பின் பயன்பாடு:

    சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

     மேக்-அப் போடும் முறை:

    மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

     ஆரோக்கியமான கூந்தல் பெற:

    இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

    மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

     கைகள் பராமரிப்பு:

    இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    ×