என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் விலை"

    • டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது.
    • உயர்தர மது வகைகள் ‘லைட்’ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக 'டாஸ்மாக்' கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆப் பாட்டில் ரூ.20 அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.

    பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்கிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது. சாதாரண மது வகைகளில் 43 பிராண்டுகளும், நடுத்தர அளவில் 49 பிராண்டுகளும், 128 பிரீமியம் பிராண்டுகளும் விற்பனையாகி வருகிறது.

    உயர்தர மது வகைகள் 'லைட்' கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அரசுக்கும் இப்போது நிதி நெருக்கடி அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    • ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
    • பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எப்போதும் மதுபானங்களின் மீதான கலால் வரி கர்நாடக பட்ஜெட்டில் உயர்த்தப்படும். இதன் மூலம் மதுபானங்கள், பீர் வகைகளின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கர்நாடக அரசு, கலால் வரியை உயர்த்தி பீர் விலையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக சில குறிப்பிட்ட பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது.

    இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் கலால் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயரும் பீர்களின் பழைய மற்றும் புதிய விலை விவரம் பின்வருமாறு:-

    இந்த விலை உயர்வின் படி லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100), பவர் கூல் ரூ.155 (ரூ.130), பிளாக் போர்ட் ரூ.160 (ரூ.145), ஹண்டர் ரூ.190 (ரூ.180), உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (ரூ.240), உட்பகர் கிளைட் ரூ.240 (ரூ.230) ஆக உயர்த்தப்பட உள்ளது.

    ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×